Lagoon Bajar அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் 21.01.2023 ( சனிக்கிழமை ) அன்று புத்தளம் முஸ்லிம் கலாச்சார மண்டபத்தில் அல்லாஹ்வின் துணையுடன் நன்றே நடைபெற்று முடிந்தது.
இக் கலந்துரையாடலில் சமுகத்தை நேசிக்கும், போதையற்ற புத்தளத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பலர் கலந்துகொண்டனர். மாஷா அல்லாஹ் எல்லோரும் அவர்களது பெறுமதிமிக்க கருத்துக்களை முன்வைத்தனர். இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் சேர்ந்து போதை ஒழிப்புக்காக பல விடயங்களை செய்யவுள்ளோம்.
இன்ஷா அல்லாஹ் புதியதோர் போதையற்ற புத்தளத்தை உருவாக்க எம்முடன் கைகோர்த்து பயணிப்பதற்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
0 Comments