நல்லதண்ணி- சிவனொளிபாதமலை வீதியிலுள்ள ஹோட்டல்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக என நல்லதண்ணி பொது சுகாதார பரிசோதகர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருபவர்களுக்கு சுத்தமான உணவு வழங்குவது இந்த ஹோட்டல் உரிமையாளர்களின் பொறுப்பாகும் . எனவே இங்குள்ள ஹோட்டல்களை அடிக்கடி பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவ்வாறு ஹோட்டல்களை சோதனை செய்யும் போது, அசுத்தமாக உணவு தயாரிக்கும் அல்லது கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாஸ்கரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments