Subscribe Us

header ads

Saudi க்கு புதிய விசாவில் வருபவர்களுக்கு எச்சரிக்கை

 


புதிய வேலை விசாவில் சவுதி அரேபியாவுக்கு வருபவர்களில் பலரின் விசா தகவல்கள் சவுதி குடியேற்றத்தில் புதுப்பிக்கப்படாததால், பலர் விமான நிலையங்களை விட்டு வெளியேற முடியாமல் திரும்ப அனுப்பப் படுகின்றனர்.

விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் புதிய விசா எண்ணை உள்ளிடும்போது, அவர்களது விசா ஸ்டாம்பிங் ஆன தகவல் கணினியில் காட்டப்படாமல் இருக்கிறது. எனவே, விமான நிலைய அதிகாரிகளால் எதுவும் செய்ய இயலாமல் திரும்ப அனுப்பப் படுகின்றனர். கடந்த சில வாரங்களாக தொடரும் இந்த பிரச்சனையில் சிக்கி பலர் இவ்வாறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள், புதிய வேலை விசாவில் சவுதி அரேபியாவிற்கு வருபவர்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் சவுதி ஜவாசத் தளத்தில் விசா தகவல்கள் அப்டேட் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

இவ்வாறு செய்யாமல் நீங்கள் சவுதி அரேபியாவை அடைந்த பிறகு இது போன்ற பிரச்சனையை சந்தித்து நாடு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், நீங்கள் உங்கள் சொந்த செலவிலேயே நாடு திரும்ப வேண்டும்.

சவுதிஅரேபியாவிற்கு புதிய விசாவில் வருபவர்கள், நாட்டில் இருக்கும் போது பயணம் செய்வதற்கு முன்பாக முகீம் பதிவு செய்யும் போதும் அவர்களது தகவல்கள் சரியான முறையில் பதிவேற்றப்பட்டுள்ளதாக என்பதை கண்டுபிடிக்க இயலும்.

விசா தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படாத பயணிகள், உடனடியாக பயணத்தை ரத்து செய்வதன் மூலம் அவர்களது இருவழி பயணத்திற்குண்டான விமான செலவை தடுக்க முடியும்.

மேலும், உடனடியாக மும்பை அல்லது டெல்லியில் உள்ள சவுதி தூதரகத்தை தொடர்பு கொண்டு தங்களது பிரச்சனையை பதிவு செய்வதன் மூலம் உடனடி தீர்வு காண முடியும் என முன்னணி விமான நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசா தகவல்கள் சரிசெய்யப்பட்டதாக உறுதியான பிறகு, மீண்டும் முகீம் மூலம் விசா எண்ணை மறுஉறுதி செய்த பிறகே சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்ய தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வருபவர்களின் தகவல்கள் பதிவேற்றப்படாமல் இருந்தால், அவர்களை திரும்ப அழைத்து செல்லும் பொறுப்பு இவர்களை அழைத்து வந்த விமான நிறுவனங்களுக்கே சாரும். மற்ற விமான நிறுவனங்களின் விமானங்களில் இவர்கள் திரும்ப வர இயலாது.

எனவே, தொடர்ச்சியான விமான சேவை இல்லாத விமானங்களில் பயணித்தவர்கள், அதே நிறுவனத்தின் அடுத்த விமானம் வரும்வரை விமான நிலையங்களிலிலேயே தங்கியிருக்கும் சிரமமான சூழ்நிலையும் ஏற்படும். விமான நிலையத்தில் இருந்து வெளியேறவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விமான நிலைய அதிகாரிகளாலும், விசாவில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தவும் முடியாது.

எனவே, புதியதாக சவுதிக்கு வருபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments