நம் நாட்டின் செல்வச்செழிப்புக்களை ஏதோ ராஜபக்சாக்கள் எனும் அரக்கர்கள், நம் இயல்புகளுக்கும் பண்புகளுக்கும் அப்பாற்பட்ட கல் நெஞ்சுக்காரர்கள் கொத்திக்கொண்டு போனதாகவே பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மையில் ராஜபக்சாக்கள் யாரெனில், ராஜ ஆசனத்தில் அமர வைக்கப்பட்ட நானும் நீங்களும்தான்!!
-------------------------------------------
QR code கொடுத்தபின் இன்று ஏழாவது நாளில் பெற்றோல் செட்டுக்கள் சூறாவளியை தாண்டிய கடலாய் அமைதியாய் காட்சியளிக்கின்றன.
சேவையாற்றும் ஊழியன் அமைதியாய் கதிரையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருக்கிறான்.ஏறத்தாழ முழு ஊரின் வாகனங்களும் தங்கள் கோட்டாக்களுடன் ரோட்டில் ஓடித்திரிகின்றன.
ஆக, முன்னைய வாரங்களில் இரவு பகலாய் நின்ற ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு என்னாயிற்று என்று தெரியவில்லை.
கொம்யூனிசம் சரியா தவறா தெரியவில்லை.ஆனால் வளப்பற்றாக்குறை தொண்டைக்குழியை நெருக்கும்போது தேவைக்கதிகமாய் நுகர்ந்து பதுக்கி வைப்பதால், தேவையுடைய ஓராயிரம் பேர் பாதிக்கப்படுவதை எப்படி ஆதாரிப்பது.
என் வயிறு நிறைய, என் வயிற்றுக்கு தேவையான சோற்றை இன்னும் இரண்டு மாதத்துக்கேனும் சேமித்துவிடுவோம்,இன்னும் நூறு பேர் நாளைக்கே பட்டினியால் மரணித்தால் நமக்கென்ன என்பதுதான் நம் மன நிலை..இன்னும் ஓர் படி மேலே சொன்னால்,சேமித்தவனே புத்திசாலி,பலசாலி!!
கேட்டால் "Only the Strong Survive” வாம்!!
பெற்றோல் செட்களுக்க்கான வரிசைகளில் அவரவர் வாகனங்களை இடையில் புகுத்திக்கொண்டு பெறோல் பெற்றவர்களில், என் நட்பு வட்டாரங்களில் கூட ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
கூச்சமே இல்லாமல் பெருமையாய் சொல்லித்திரிந்தார்கள்.
1500 ரூபாய்க்கே பெற்றோல் என்றிருந்த காலத்தில், 5000 ரூபாயை கையில் புதைத்துவிட்டு "4000 க்கு அடி " என்றவர்கள் ஏராளம்.
ஏற்கனவே வறுமையாலுல் விலையேற்றத்தாலும் நொந்து போயிருக்கும் சமூகத்தில், பெற்றோலை பதுக்கி வைத்துக்கொண்டு லீட்டர் நாலாயிரம் ரூபா வரை விற்றவர் ஏராளம்..
Health sector க்கு தனியாக பெற்றோல் வினியோகம் அவசியம்தான்.அவர்களுக்காக தனியாக பெற்றோல் வினியோகிக்கப்பட்டது.
இந்த இக்கட்டான நிலையில் வழங்கப்பட்ட இந்த சலுகை, ஒரு ஜாம்போ சைஸ் ஓபர்.
இப்படி பெறப்பட்ட பெற்றோலுக்கு ஓர் அதிகபட்ச பொறுப்பிருந்திருக்க வேண்டும்.
அதை அவர்கள் ஹோஸ்பிடல் போய்வரவும் அவசியத்திற்கும் மாத்திரம்தான் பாவித்திருக்க வேண்டும்.
ஆனால் அந்த பெற்றோல்,
உற்றார் உறவினர் தோழர்களுக்கு பகுந்தளிக்கப்பட்டது..
அடிக்கப்பட்ட பெற்றோலில் பிக்னிக் போய் வந்தார்கள்..
Black Market டின் பதுங்கு குழிகளுக்கு பம்பு குழாய் மூலம் சப்ளை நடந்தது.
இது சரியா என்று கேட்டுப்பாருங்கள்??அதற்கான ஞாயங்கள் அவர்களிடம் இருக்கும்.
நமக்கென்ற சலுகைகள் பெறப்படும்போது ,அதன் துஷ்பிரயோகங்களுக்கான ஞாயங்களும் சேர்ந்தே பிறந்து விடுகின்றன.
நீங்கள் மட்டும் என்ன உத்தமனா என்றால் இல்லை..இல்லவே இல்லை..மூன்று வாரங்களாக , லீட்டர் மூவாயிரத்தி ஐநூறுக்கு வாங்கி ஓடியதால் நானும் இந்த சாக்கடையின் பங்குதாரனே.!!
துஷ்பிரயோகம் என்பது நம் நாட்டின் Manufacturing defect. நம்மிடமுள்ள நூற்றாண்டுகால Genetical disorder!!
சேற்றுப்புழுக்கள் வாழும் சகதியிலிருந்து தலைவனை மட்டும் சிங்கி இறாலாக எதிர்பார்த்தால் எப்படி??
இதற்கிடையில் கோத்தாவையும் ரணிலையும் பேசித்திரியும் உத்தம யோக்கியத்தை நாம் எங்கணம் பெற்றோமோ தெரியவில்லை!!
ராஜ கிரீடம் பெறப்பட்டால் நாம் அனைவரும் ராஜபக்சாக்களே!!!!
நாம் அனைவரும் Professionally திருடர்கள் அல்ல.. ஆனால் Ethically மகா திருடர்கள்.
இந்நாட்டின் அத்தனை பேரும் திருடனா என்று கேட்டால், இல்லை ; கல்லுடன் சேர்ந்து அவ்வப்போது சில சோறும் கடிபடுகிறது!!
-Rajabdeen Amjath-
0 Comments