மே மாதம் 9ம் திகதி அலரி மாளிகையில் பிரதமருக்கு ஆதரவாக நாடு பூரகாவும் உள்ள பிரதமரின் நெருங்கிய சகாக்களின் அடியாட்கள், கூலிப்படை அலரி மாளிகையை வந்தடைந்தனர்.
அதாவுல்லா அனுப்பியதாக சந்தேகிக்கபடும் கூலிப்படையும் அதே தினம் வந்தடைந்து,அலரி மாளிகை உள்ளே சென்று,கூட்டத்தை நடத்தி,மொத்தமாக அழைத்துகொண்டு, “MainaGoGema”யை முழுமையாக தாக்கி, அங்கிருந்தவர்களை படு மூர்க்கமாக தாக்கி, அப்படியே “GotaGoGema”க்கு சென்று, ஒரு மாதமாக அமைதியாக போராடியவர்களை கத்தி,வாள், தடிகள் கொண்டு வந்து தாக்கியதுடன்,கூடாரங்களை நெருப்பு வைத்து,அங்கிருந்து தப்பி ஓட முற்பட்ட வேளை பலர் வசமாக சிக்க, சிலர் சமயோசிதமாக தப்பியும் ஓடி விட்டனர்.
அதாவுல்லாவும் அனுப்பியதாக சந்தேகிக்கபடும் கூலிப்படையின் தாக்குதலுக்கு பிறகு, பிற்பகல் 3,4 மணிக்கெல்லாம் கூலிப்படைகளுக்கு பொதுமக்கள் விரட்டியடிக்க, எங்கே தான் அனுப்பிய கூலிப்படை அகப்பட்டுவிடுமோ, உண்மை வெளிவந்து விடுமோ என்ற பயத்தினால், அவசரம், அவசரமாக மாலை 5 மணிக்கு பிறகு “அக்கறைபற்று” மேயர் அதாவுல்லாவின் மகன் சகி அகமட்டினால், கோதபாய ராஜபக்சவுக்கு எதிராக சிறு குழுவை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாங்களும் எதிர்ப்பு என்பதை காட்டி கொள்ள நடத்திய நாடக ஆர்ப்பாட்டமா என பலத்த சந்தேகத்தை உண்டுபன்னுகிறது.
இத்தனை காலமும் நாட்டில், ஏகப்பட்ட பிரச்சினை நடந்தும், பல நூறு ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்தும், பல மாதங்களாக நாட்டில் பல பிரச்சினைகளும் ஏற்பட்டும் வீதிக்கு இறங்காத மேயர் சகி அகமட், ஏன் 9ம் திகதி மாலை அவசரமாக ஆர்ப்பாடம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் ? யாருடைய ஏற்பாடு ? ஏன் இந்த அவசரம் ?
இக்கலவரத்திற்கு பல வழிகளில், அதாவுல்லாவும், அவரது மகன் சகி அகமட்டும் காரணாமாயின், இப்பேரழிவிற்கு இவர்களும் காரணம் சொல்ல வேண்டும். 9 பேர் கொல்லப்படதற்கும்,120 பேருக்கு காயம் ஏற்பட்டதற்கும் இவர்களும் காரணமானவர்களாக இருந்தால் மக்கள் தகுந்த பாடத்தை இவர்களுக்கு புகட்ட வேண்டும்.
மக்களை கொலை செய்து, மக்களை தாக்கி, துன்புறுத்தி அரசியல் செய்யும் கேவலமான அரசியல்வாதிகளை சட்டத்தின் முன்னறுத்தி தகுந்த தண்டனை பெற சம்பந்தப்பட்டவர்களும், சமூக அக்கறை கொண்டவர்களும் முன்வர வேண்டும்.!
0 Comments