Subscribe Us

header ads

நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் சிக்கலாகின்றது!!!!


 Dr. Rauff Zain

இலங்கைப் பொருளாதாரம் மரணச்சுழியில் சிக்கியுள்ளதென உலகப் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே எச்சரித்துள்ள நிலையில் உலக வங்கியும் கைவிரித்து விட்டது.நுண் பொருளாதாரம் தொடர்பான ஒரு செயல்திட்டத்தை இலங்கை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கையை நாம் திரும்பியும் பார்க்கமாட்டோம் என அறிவித்துள்ளது உலக வங்கி.

சர்வதேச நாணய நிதியமும் இப்போதைக்கு உதவியளிக்காது.அதன் நிபந்தனைகள் ஈடேற வேண்டும்.எப்படியும் அதற்கு ஒரு வருடம் செல்லும்.

பொருளாதார வங்குரோத்தின் பிரதிபலிப்புகளில் ஒன்றான டொலர் நெருக்கடி மென்மேலும் கூர்மையடைந்து வருகிறது.வெறும் 10 000 டொலர்களே கையிருப்பில் உள்ளதென மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது

அத்தொகையை விட பலமடங்கு அதிக டொலர்கள் இலங்கையின் தனிப்பட்ட வணிகர்களிடம் உள்ளது.டொலர்கள் எப்படி மாயமாக மறைந்தன?நாட்டை விட்டு வெளியே பாய்ந்தன? இந்த மர்மமான கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை.

டொலர் நாட்டுக்குள் வருவதற்கான வழிகள் அனைத்துமே அடைபட்டு விட்டன.ஏற்றுமதி செய்ய எதுவுமில்லை.தேயிலையை வாங்கும் ரஷ்யா போரில் இறங்கியுள்ளது.வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் வங்கிக்கு பணம் அனுப்புவதை நிறுத்தியுள்ளனர்.உண்டியல் பரிமாற்றமே நடக்கிறது.உல்லாசப்பயணிகள் இலங்கை வருவதற்கான சூழமைவு நாட்டில் இல்லை என சமீபத்திய sky news செவ்வியில் பிரதமரே தெரிவித்து விட்டார்.

இந்தியாவின் இரவில்தான் இப்போது நாடு நகர்கிறது.இன்னொரு 500 மில்லியன் டொலர் கடன் தருவதாக அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். .அதன்மூலம் ஜுன் மாதத்திற்கு தேவையான எரிபொருளை மாத்திரம் இறக்குமதி செய்யலாம்.மருந்து,உணவுப்பொருட்கள் எதனையும் இறக்குமதி செய்ய முடியாமல் போகும். ஜுன் இறுதியில் நாடு முழுமையாக ஸ்தம்பித்துப் போகும் நிலை ஏற்படும்.ஆகஸ்டில் உணவுத்தட்டுப்பாடும் தலைதூக்கும் என புதிய பிரதமரே ஆருடம் கூறியுள்ளார்

எப்படியோ எதிர்வரும் வாரங்கள் பொருளியல் ரீதியில் மிகக்கடினமானவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

Post a Comment

0 Comments