Subscribe Us

header ads

இளைஞர் ஒருவரின் நிர்வானப்படத்தை வைத்து கப்பம் கோரி மிரட்டிய இளம் தம்பதியினர் கைது (யாழ்ப்பாணத்தில்)

 


இளைஞன் ஒருவரை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய், செல்வபுரத்தைச் சேர்ந்த இளம் கணவன், மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் இருவரே, நேற்று முன்தினம் (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “சந்தேகநபர்கள் முகநூல் போலிக் கணக்கின் ஊடாக பெண் ஒருவர் போன்று சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞருடன் நட்பாகியுள்ளனர்.

பின்னர் இளைஞனை கோப்பாய்க்கு அழைத்து, தமது வீட்டில் அறையில் பூட்டி வைத்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததுடன், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

பின்னர் அவற்றை பேஸ்புக்கில் பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தி, இளைஞனிடம் 2 இலட்சம் ரூபாய் பணத்தை கோரியுள்ளனர். அச்சமடைந்த இளைஞன், வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை கடந்த வாரம் வைப்பிலிட்டுள்ளார்.

இந்நிலையில், மீளவும் இந்த வாரம் இளைஞனிடம் 5 இலட்சம் ரூபாய் கோரியுள்ளனர்.

அதனால் அச்சமடைந்த இளைஞன், கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்திருந்தார். அதனை விசாரித்த பொலிஸார், இளம் தம்பதி உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர்.

Post a Comment

0 Comments