Subscribe Us

header ads

மகிந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார், நானும் வெளியேற மாட்டேன் - நாமல் ராஜபக்ச

 


இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச - தனது ஆதரவாளர்கள் மூலம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதையடுத்து, ஒரு நாள் வன்முறை தூண்டபட்டது.

இதனை   தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது அறிந்ததே..


இந்நிலையில் மகிந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ச இன்று செவ்வாயன்று AFP இடம் தெரிவித்தார்.

திங்கட்கிழமை இரவு மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஆத்திரமடைந்த மக்கள் முற்றுகையிட்டதையடுத்து, இராணுவத்தினரால் அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்.

“நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்," என்று அவர் கூறினார், அவரது குடும்பத்திற்கு எதிரான மக்கள் கோபத்தின் எழுச்சியை "மோசமான நிகழ்வு " என்று விவரித்தார்.


மகிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


மகிந்தவின் தலைநகர் கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் வேலியை உடைத்து தாக்குதல் நடத்தியதையடுத்து அவர் அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


"எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார்" என்று நாமல் கூறினார்.

Post a Comment

0 Comments