அநாமதேயக் குழுக்களால் நடத்தப்படும் எந்தவொரு போராட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த பதிவு கீழே.
"அநாமதேயக் குழுக்களால் நடத்தப்படும் எந்தப் போராட்டத்திலும் ஐக்கிய தேசிய
கட்சி பங்கேற்காது. நாடு முழுவதும் எங்களது சத்தியாக்கிரக போராட்டத்தை
முன்னெடுப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அடுத்த சத்தியாக்கிரகம் ஏப்ரல் 6
ஆம் திகதி மாத்தறையில் நடைபெறும். எம்முடன் இணைந்து கொள்ள அனைவருக்கும்
அழைப்பு விடுக்கிறோம்."
0 Comments