முகத்துவாரம் என்ற கிராமமானது கல்பிட்டி பிரதேசத்தில் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட பழமைவாய்ந்த ஒரு கிராமமாகும்.இக்கிராமத்திற்கு தரைமார்க்கமாகச் செல்வதைவிட களப்பு வழியாகச் செல்வதே மிகவும் எளிது.எனவே இவ்வூரிற்குச் செல்வோரும்,இவ்வூரிலிருந்து நகருக்குள் வருவோரும் இயந்திரப் படகின் மூலமே போக்குவரத்தினை மேற்கொள்கின்றனர்.
இப்படகிற்கு ஏறுவதற்கும்,இறங்குவதற்குமான இறங்குதுறை தற்போது காணப்படும் நிலையே கீழே புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ளன.தினமும் நகருக்கு அன்றாட தேவைகளுக்காக வரும் மக்கள் வைத்தியசாலையை நோக்கி வரும் நோயாளிகள்,கர்ப்பிணித்தாய்மார்கள்,இடைநிலை,உயர்தர கல்வியைத்தொடரும் பாடசாலை மாணவமாணவிகள்,முதியோர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் என பல்வேறு தரப்பினரும் பல அசௌகரியங்களை அனுபவித்தவண்ணம் உள்ளனர்.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தற்காலிக இறங்குதுறையை புணரமைத்து தருமாறு பிரதேசசபை,பிரதேச செயலகத்திடமும் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டபோதிலும் எவ்வித பலனும் ஏற்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இங்கு நடைபெறும் படகுச்சேவைக்காக ஒவ்வொரு வருடமும் சுமார் 6 தொடக்கம் 7லட்சம் ரூபாய்வரை பிரதேசசபைக்கு வரிப்பணமாக செலுத்தப்பட்ட போதிலும் மக்களின் இந்த அவலக்குரல் அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே காணப்படுகின்றது.
-Ayaskhan-
0 Comments