குற்றச்செயல்கள் சம்மந்தமாக, உங்களது முறைப்பாடுகளை, மூன்று மொழிகளிலும், மிக இலகுவாக வீட்டிலிருந்தவாறே ஓன்லைன் மூலமாக முறையிடலாம்.
இந்த முறையை மிகக்குறைவானவர்களே பயன்படுத்துகின்றனர், ஆனால் இந்த முறை நம்பகத்தன்மையானதும், உடனடியாக உங்கள் முறைப்பாடுகள் விசாரிக்கப்படும்.
எவ்வாறு?
பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக உங்களால் முறையிடமுடியும். (TELL IGP)
மேலுள்ள Linkய் Click செய்து அதில் உள்ள தகவல்களை பூரணப்படுத்தி, உங்களது முறைப்பாடு எவ்வகையானது என்று முறையிடலாம்.
எவ்வகையான முறைய்ப்பாடுகளை முன்வைக்கலாம்.
1. பெண்கள் / பிள்ளைகள் துஷ்ப்பிரயோகம்.
2. தொல்பொருள் சம்மந்தப்பட்டவை
3. தாக்குதல்கள் சம்மந்தமாக
4. இலஞ்சம் மற்றும் ஊழல்கள்
5. பொலிசுக்கு எதிராக
6. பெருங்குற்றச்செயல்கள்
7. சைபர் வலையத்தள குற்றங்கள்
8. போதை பொருள் விட்பனை மற்றும் பாவனை
9. திருட்டு
10. பாலியல் துன்புறுத்தல்
11. சொத்துக்கள் பிரச்சினை
இவ்வாறு நிறைய விடையங்களை நீங்கள் இங்கு தெரிவு செய்ய முடியும்.
அதில் கேட்கப்படுபவை
1. உங்களது மாவட்டம்
2. அருகிலுள்ள காவல் நிலையம்
3. புகாரின் அல்லது முறைப்பாட்டின் வகை
4. உங்கள் பெயர்
5. முகவரி
6. தேசிய அடையாள அட்டை இலக்கம்
7. தொடர்பு இலக்கம்
8. மின்னஞ்சல் முகவரி
9. புகார்/முறைப்பாடு ( உங்கள் புகாரை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் அனுப்ப முடியும்.)
10. புகார் / முறைப்பாட்டு விடயம்
11. இணைப்பு (புகார் /முறைப்பாடு தொடர்பான ஏதேனும் ஆவணம் அல்லது படம் உங்களிடம் இருந்தால், இந்த புகாருடன் இணைக்க முடியும். அதிகபட்ச இணைப்பு அளவு 5MB ஆகும்.)
இறுதியாக Submit பண்ணவும்.
உங்களது பொலிஸார் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி உங்களை தனியாக விசாரித்து அதட்கான தகுந்த நடவடிக்கைகளை மிக விரைவாக எடுப்பார்கள்.
MHM ரஸ்மி
நகர சபை உறுப்பினர்
புத்தளம்.
0 Comments