நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அமைதியையும் நீதியையும் போதித்தார்கள்: பிரியந்த குமாரவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், நாங்கள் மனிதாபிமானம் உள்ள சமூகம் : இம்ரான் கான்
இஸ்லாத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தெரிவித்தார்
இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வின் போதே பிரதமர் இம்ரான் கான் இதனைத் தெரிவித்தார்.
மதத்தின் பெயரால் மக்கள் பிறரைக் கொல்கிறார்கள் என்றும் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். “நபி (ஸல்) அவர்கள் அமைதியைப் போதித்தார்கள் அவர் எங்களுக்கு அமைதியையும் நீதியையும் கற்பித்தார்” என்று அவர் கூறினார். மனிதாபிமானமுள்ள சமுதாயத்தில் நீதி கிடைக்கும் என்றார்
0 Comments