பேஸ்புக் காதலி முத்தம் கொடுத்த மறுத்ததால் 17 வயது பாடசாலை மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் நட்பு மூலம் பழக்கமாக 16 வயது களுத்துறை பிரதேச மாணவியை காதலித்து வந்த மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்கொலை செய்த தினம் மாணவன் தன்னோடு தொலைபேசியில் கதைத்துக்கொண்டிருந்தவேளை முத்தம் ஒன்று தறுமாறு கோரியதாகவும் அப்போது தொலைபேசி கிழே விழுந்து இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகவும் இதனால் கவலையடைந்த மாணவன் தற்கொலை செய்துள்ளதாக மாணவிடம் நடத்திய விசாரணையில் தெரிவருகிறது.
தொலைபேசியில் தொடர்பில் இருந்த இருவருக்கும் இதுவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
0 Comments