Subscribe Us

header ads

புத்தளத்தில் பிரசித்தி பெற்ற டாக்டர்களுக்கு அமைச்சர் அலி சப்ரி கடும் எச்சரிக்கை


 கை ராசி காரரா கைசேதம் பண்ணுபவரா?

கடந்த பதினைந்து வருடங்களாக வைத்தியராக பணி புரியும் டொக்டர் முனவ்வர் அவர்களுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு ஒன்று சுமத்தப்பட்டுள்ளது.

யூனானி வைத்தியரான அவர் தன் துறை சாராத ஆங்கில மருந்துகளையே பெரும்பாலும் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார்.

நோயாளிகள் விரைவில் குணமாகி விட வேண்டும் என்பதற்காக அவர் கொடுக்கின்ற அதிக வீரியமுள்ள மருந்து வகைகளினால் இப்பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக பல வகையான புற்று நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் மற்றும் ஏனைய உள்ளக நோய்கள் அதிகரித்துள்ளதோடு, சில வேளைகளில் குறிப்பிட்ட மருந்துகளின் தொடர் பாவனையால் உயிரிழப்புகளும்நேர்ந்திருக்கலாம் என்று கடந்த பல மாதங்களாக எமக்கு புகார்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.

அரசியல் விவகாரங்களில் எனக்கெதிராக பணியாற்றியவர் என்பதனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதை நான் பிற்படுத்தியே வந்தேன். காரணம் அரசியல் பழி வாங்கல் என்ற பழி என் மீது சுமத்தப்படும் என்று நான் தயங்கியதால். ஆனால் எனக்கு கிடைத்து வரும் தொடர் புகார்களினால் அரசியல் பழி வாங்கல் என்ற அவ சொல் என் மீது சுமத்தப்பட்டாலும் அதனை இனி பொருட்படுத்தும் நிலைப்பாட்டிலிருந்து விலகி கொள்ளும் தீர்மானத்துக்கு வந்துள்ளேன். காரணம் கருணையே உருவாக இருக்க வேண்டிய ஒரு வைத்தியரின் கை கொலை செய்யும் கையாக மாறி இருப்பதாக அண்மைக்காலமாக எனக்கு தொடராக கிடைத்து வரும் டொக்டர் முனவ்வருக்கு எதிரான புகார்கள் எண்ண தோன்றுகின்றன. அவரை நாம் பழி தீர்ப்பதென்றால் நாம் அரசாங்கத்துடன் இணைந்த அடுத்த கணத்திலேயே அதனை நாம் செய்திருப்போம் என்பதையும் இங்கே நான் அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

இம்மாவட்டத்தில் வாழும் எனது மக்களின் நலன் விரும்பி என்ற வகையிலும் இங்கு நிகழும் பிரச்சினைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியவன் என்ற வகையிலும் இது விடயத்தில் டொக்டர் முனவ்வர் அவர்களை எச்சரிக்க கடமைப் பட்டுள்ளேன். கைராசி காரர் என்று பெயர் எடுப்பதற்காகவும், காசு சம்பாதிப்பதற்காகவும் மக்கள் உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்த விரும்புகிறேன். சகோதரர் முனவ்வர் தனது தராதரத்துக்கு ஏற்ற வண்ணம் தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு மருந்து வழங்க வேண்டும். MBBS வைத்தியர்களோ அல்லது விஷேட வைத்திய நிபுணர்களோ நோயாளிகளின் நிலை அறிந்தே படிப்படியாக மருந்து வழங்குவார்கள். ஆனால் டொக்டர் முனவ்வர் எடுத்த எடுப்பிலேயே வீரியம் அதிகம் கொண்ட மருந்துகளை வழங்கி உயிராபத்தை ஏற்படுத்துகின்றார்.

முக்கியமான ஒரு விஷயத்தையும் நினைவூட்ட விரும்புகின்றேன். நான் 35 வருடங்களுக்கும் மேலாக விளம்பரமில்லாமல் சமூக சேவை புரிந்தவன். இப்போதுதான் பெரிய அளவில் அரசியலில் நுழைந்து அத்தனையும் மக்கள் சேவைக்காக அர்ப்பணித்து வருகிறேன். அரசியல் ஒரு தொழில் அல்ல அது நிரந்தரமானதுமல்ல. நானும் அரசியலை நிரந்தரமாக செய்ய வந்தவனுமல்ல. ஆனால் அரசியலை தொழிலாக செய்தவர்களின் அனுசரனையோடு அவர்களின் பக்க பலத்தோடு சமூக விரோத செயலை செய்து தம் வயிறு நிரப்பியவர்களின் தோலுரித்து காட்டுவதும் எனது அதிகாரத்துக்குட்பட்ட கால இடைவெளியில் மக்கள் விரோதிகளின் பாதக செயல்களை தடுத்து நிறுத்துவதும் எனது கடமையாகும் என்பதை தெரிவிக்க ஆசைப்படுகிறேன். எனது இந்த கூற்று டொக்டர் முனவ்வர் போன்றவர்களுக்கு மிகவும் பொருத்தமாகும்.

இந்த அறிவித்தலானது டொக்டர் முனவ்வருக்கு மட்டுமல்ல, அதே தரத்திலுள்ள டொக்டர் செய்னுதீன் மற்றும் ஏனைய MBBS அல்லாத வைத்தியர்களுக்கும் பொருந்தும். எனவே எனது இந்த அறிவித்தலோடு உங்கள் தொழிலுக்கு சம்பந்தமில்லாத சிகிச்சை அளிப்பதை நீங்கள் நிறுத்தி கொள்ளுங்கள். இது எனது முதலும் இறுதியுமான எச்சரிக்கையாகும். மீறி நடந்தால் மக்கள் நலன் கருதி மிகவும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள நான் நிர்ப்பந்திக்கப்படுவேன் என்பதை பகிரங்கமாக அறிய தருகிறேன்.

இவ்வண்ணம்
அலி சப்ரி ரஹீம்
பாராளுமன்ற உறுப்பினர்

Post a Comment

0 Comments