Subscribe Us

header ads

தடுப்பூசி போடாத 30 வயதிற்கு மேற்பட்டோர் இந்த ஊர்களுக்கு செல்ல முடியாது


30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் இலங்கையின் இரு இடங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இவ்வாறு கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் செல்ல இனி அனுமதி இல்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவிட் தொற்று தடுப்பு தொடர்பான அந்தந்த மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, கோவிட் தடுப்பூசி அட்டை இல்லாமல் குறித்த இரு நகரங்களுக்குள் நுழைய முயன்ற 30 வயதிற்கு மேற்பட்ட நபர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

மேலும், இவ்வாறானவர்கள் குறித்த இரு நகரங்களுக்குள்ளும் நுழைவதைத் தடுக்கும் பொருட்டு பண்டாரவளை மற்றும் மன்னாரின் நுழைவு இடங்களில் சாலைத் தடைகள் செயல்படும் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments