சத்ரியன்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் தொடர்பான அவசரகால நிலையை பிரகடனம் செய்திருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
நாட்டில் பால்மாவைப் பெற முடியாமல் போய் பல வாரங்களுக்குப்பின்னர்- சீனியின் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்கிற்கு மேலாக அதிகரித்து பல வாரங்களுக்குப் பின்னர்- எரிவாயுவைப் பெறுவதற்காக மக்கள் அலைந்து திரியத் தொடங்கி பல வாரங்களுக்குப் பின்னர் அரிசி விலை எகிறி பல மாதங்களுக்குப் பின்னர் தான், இந்த அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும், விலை அதிகரிப்பும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.
பால்மா விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் மறுத்த போதே, சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவோம் என்று சண்டித்தனம் செய்தனர் இறக்குமதியாளர்கள்.
அவர்கள் கூறியபடியே சந்தையில் இருந்து பால்மா வகைகள் காணாமல் போய்விட்டன. பால்மாவை நம்பியிருந்த குழந்தைகள், முதியவர்களின் நிலை மோசமடைந்திருக்கிறது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி. அதனைக் கொண்டுள்ளவர்களால் தான் கொரோனாவிடம் இருந்து தப்ப முடியும்.
ஆனால், பால்மா போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியும், தாங்கு திறனும், குறைந்து போய்க் கொண்டிருக்கிறது.
0 Comments