Subscribe Us

header ads

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16,416 அறவீடு (விபரங்கள் உள்ளே)

 


தொழிலுக்காக வௌிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16,416 ரூபாவினை அறவிட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


அந்த பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துக் கொள்ளும் நபர்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வதற்கு முன்னர் அவர் செல்லும் நாட்டிற்கு அமைய தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் தொழிலுக்காகதான் வௌிநாடு செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தடுப்பூசி வேலைத்திட்டதில் இவர்களை இணைத்துக் கொள்ள முடியாது என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய தெரிவித்தார்.  

Post a Comment

0 Comments