கல்பிட்டி அஹதியா பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்றது .
இதன் போது தற்போது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரே இஸ்லாம் சமயத்தை போதிக்கக்கூடிய பிரத்தியேக பாடசாலையான அஹதியா பாடசாலை வளர்ச்சி சம்பந்தமாகவும் அதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் அதிபர் ஆசிரியர்களால் கலந்தாலோசிக்கப்பட்டது .
அஹதியா பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் எமது சமூகத்திற்காகவும் தொடர்ந்தும் தாம் அர்பணிப்புடன் சேவையாற்ற தயாராக உள்ளதாகவும் இதற்கான அவசியத்தை பெற்றோர்களும் மாணவர்களும் உணர வேண்டும் என்றும் ,அதற்கான முயற்சிகளை ஊர் பிரமுகர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை அதிபர் ஆசிரியர்கள் என்றவகையில் தாம் முதற்கட்டமாக மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
0 Comments