பெருமளவிலான மத அமைப்புக்கள் மற்றும் மத்ரஸாப் பாடசலைகளை, எதிர்வரும் நாட்களில் தாம் தடை செய்ய இருப்பதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்சி ஒன்றில் கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது,
நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் 18 வயது வரை, அரசு அனுமதித்துள்ள கல்வித் திட்டத்தினையே கற்க வேண்டும்.
இது அல்லாமல், ஒவ்வொருவருக்கும் நினைத்தவாறு பாடசாலைகளில் விருப்பமான பாடங்களைக் கற்கவோ அல்லது நினைத்த மாத்திரத்தில் பாடசாலைகளைத் திறந்து அவர்களுக்கு விருப்பமான பாடங்களைக் கற்பித்துக் கொடுக்கவோ எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
எனவே, இது தொடர்பிலும் நாம் மிக விரைவில் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரவுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments