Subscribe Us

header ads

முஸ்லிம்களின் ஜனாசாக்களை இலங்கையிலேயே அடக்கம் செய்ய வேண்டும்! முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றில் வேண்டுகோள்


 இலங்கையின் எந்தவொரு குடிமகனும் தாம் இறந்தபின்னர் தமது உடலை வேறொரு நாட்டில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.


கொரோனாவினால் காவுகொள்ளப்பட்ட இலங்கை முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மாலைத்தீவு அரசாங்கத்திடம் இலங்கை அரசாங்கமே முதலில் கோரியுள்ளது.


தமது நாட்டிடம் இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே தாம் அதனை பரிசீலனை செய்யும் டுவிட்டர் பதிலை வெளியிட்டதாக மாலைத்தீவின் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில் ஏனைய நாடுகளைப் போன்று கொரோனாவினால் காவுகொள்ளப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இலங்கையிலேயே அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments