சுகாதார அமைச்சின் தொற்று நோயப்பிரிவு கடந்த நவம்பர் 01ஆம் திகதி விடுத்துள்ள அறிக்கையில் புத்தளம் நகருக்கு உட்பட்ட MOH பிரிவு கடந்த 14 நாட்களுக்குள் COVID-19 Positive நோயாளிகளை இனங்கண்டுள்ளது. இதன் பிரகாரம் இப்பகுதி உயர் அபாய பிரதேசமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 28, வியாழக்கிழமை புத்தளம் பிரதேச பள்ளிவாயில்கள், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா, தில்லையடி பள்ளிவாசல் சம்மேளனம், மற்றும் பிரதேச MOH காரியாலய அதிகாரிகளுடன் புத்தளம் பெரியபள்ளிவாயிலில் இடம்பெற்ற சந்திப்பில், பிரதேச பள்ளிவாயில்கள் யாவற்றையும் மறு அறிவித்தல் வரை மூடிவைப்பது என தீர்மானிக்கபட்டது. இந்த முடிவையும் மீறி செயற்படுபவர்கள் அரசாங்கத்தின் விசாரணைகளுக்கும், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கும் நேரடியாக பொறுப்பு கூறவேண்டியவர்கள் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
ஆகையால், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் பிரதேச பள்ளிவாயில்களின் நிர்வாகிகள் ஆகியோர் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர். குறிப்பாக:
1) வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இயன்றவரை குடும்பத்தில் உள்ள இளம் வயதினரின் உதவியை நாடி அவற்றை கொள்வனவு செய்து கொள்ளல். வயதானவர்கள் வெளியில் இறங்குவதனை தவிர்த்துக் கொள்ளுதல்.
2) அனைத்து வகையான விளையாட்டு நிகழ்ச்சிகள், ஒன்று கூடல்களை இக்காலப்பகுதியில் தவிர்ந்து கொள்ளுதல்.
3) வெளியில் செல்லும் தேவை ஏற்பட்டால் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுதல். 1m சமூக இடைவெளியை அனைத்து பொது இடங்களிலும் பேணிக்கொள்ளுதல்.
4) வீட்டுக்குள் நுழைந்தவுடன் சவர்க்காரம், Sanitizer அல்லது ஏதாவது கிருமிநீக்கிகளைக் கொண்டு கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
5) இது தொடர்பாக, சுகாதார அமைச்சு, முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா விடுத்திருக்கின்ற மேலதிக அறிவுரைகளை உள்வாங்கி செயற்படுங்கள்!
வல்ல அல்லாஹ் எம் அனைவரையும் இந்த கொடிய நோயிலிருந்தும், அச்சத்திலிருந்தும் பாதுகாத்து தூரமாக்குவானாக!
Grand mosque Puttalam
0 Comments