Subscribe Us

header ads

புனித ஹரம் சரீஃபின் மிம்பரை பயன்படுத்தி இஸ்ரேலிய உறவுகளுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார் அப்துர்ரஹ்மான் சுதைஸ் !

அரண்மனை அறிஞர்கள் தங்கள் எஜமானர்களுக்காக களத்தில் இறங்கி பேசுவது என்பது அதன் மிகவும் அசிங்கமான கட்டத்திற்கு தரம் தாழ்ந்துவிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று புனித ஹரம் சரீஃபின் மிம்பரை பயன்படுத்தி இஸ்ரேலிய உறவுகளுக்கு வக்காலத்து வாங்கியுள்ளார் அப்துர்ரஹ்மான் சுதைஸ் !
அதே மிம்பரில் இருந்து கொண்டு , இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் அவர் பேசிய பேச்சுக்கள், முழங்கிய முழக்கங்கள் கணக்கிட முடியாதது.
அதே மிம்பர் மற்றும் மிஹ்ராபில் பாலஸ்தீனத்துக்கும் பைத்துல் முகத்தசிற்காகவும் அழுத கண்ணீர் இன்னும் வறண்டுவிடவில்லை.
அவர் சியோனிஸ்டுகளின் வன்முறைகளை பற்றி மில்லியன் கணக்கான நம்பிக்கையாளர்களிடம் பேசி கண்ணீர் விட வைத்திருக்கிறார். .
இறுதியாக அதே சியோனிஸ்டுகளுடன் கூட்டணி வைப்பதற்காக, அரண்மனையிலிருந்து எழுதப்பட்ட குதுபா கொண்டு வரப்பட்டு படிக்கப்பட்டுள்ளது ....!
இப்போது சிறிது காலமாக, எகிப்தில் மூர்சிக்கு எதிராக நடந்த இராணுவ சதித்திட்டத்தை நியாயப்படுத்தியும், அரபு வசந்தத்தை விமர்சித்தும் , புனித ஹரமின் மண்ணில் நடக்கும் அனைத்து சீர்கேடுகளை நியாயப்படுத்தியும் சுதைஸ் தனது கடமையைச் செவ்வனே செய்து வருகிறார் ...
நபி (ஸல்) ஒருமுறை கூறினார்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது இஸ்லாத்தின் பெயர் மட்டுமே இருக்கும். குர்ஆன் வெறும் எழுத்துக்களாக மட்டுமே இருக்கும். அவர்களின் மஸ்ஜிதுகள் அழகாக இருக்கும். ஆனால் அவற்றில் வழிகாட்டுதல் இருக்காது. அவர்களின் அறிஞர்கள் வானத்தின் கீழ் மிக மோசமான கேடுகெட்ட உயிரினங்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்தே சிக்கல்கள் ஆரம்பிக்கும். அது அவர்களிடமே திரும்பும்.
இமாம் கஸ்ஸாலி கூறினார்: "மக்கள் சீரழிவது அதிகாரிகள் சீரழிகின்ற போதுதான். அதிகாரிகள் சீரழிவது அறிஞர்கள் சீரழிகின்ற போதுதான்."
நபியின் கூற்றுப்படி,
வானத்தின் கீழ் உள்ள மிக மோசமான உயிரினங்களின் பட்டியலில் சுதைசும் ஒருவராகிவிட்டார் ...
அதே நாட்டில் இன்னும் பல அறிஞர்கள் உள்ளனர். சிறையில் இறைவழி மரணத்திற்காக காத்திருக்கக்கூடியவர்கள் அவர்கள். உலகின் அரண்மனைகளுக்குப் பதிலாக சொர்க்கத்தின் அரண்மனைகளைத் தேர்ந்தெடுத்த பெரியவர்கள் ....!
எப்படியிருந்தாலும், சுதைசின் பின்னால் நின்று தொழுவதும், அவர் பாசங்குத்தனமாக குர்ஆனைப் ஓதுவதை கேட்பதும் இனி நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தராது ...
Dr அப்துஸ் ஸலாம் அஹமது.
(மத்திய செயற்குழு உறுப்பினர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்)
(சவூதி அரேபியாவின் இந்த துரோக நடவடிக்கைகளை ஆதரித்து சில இங்குள்ள சில சலஃபி அறிஞர்களும் பேசுவார்கள் பாருங்களேன்)

-Abdur Rahman-

Post a Comment

0 Comments