லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த
செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து,
வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவசர மருத்துவ உதவியை
அனுப்புமாறு கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவிட்டார்.
கத்தார் லெபனான் நாட்டிற்கு உதவ இரண்டு கள மருத்துவமனைகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையின் கத்தார் தேடல் மற்றும் மீட்புக் குழுவையும் (Lekhwiya) தேவையான உபகரணங்களுடன் கடந்த புதன்கிழமை (05-08-2020) அன்று அனுப்பி வைத்தது.
லெபனானில் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ “Lebanon In Our Hearts” என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் QAR 50 மில்லியன் நன்கொடையை அளித்தார்.
0 Comments