கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (04-08-2020) லெபனான் நாட்டின் அதிபர் மைக்கேல் உடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
இந்த உரையாடலில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கத்தார் அமீர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கூறினார்.
அமீர், லெபனானுடனான கத்தாரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, வெடிப்பினால் ஏற்பட்ட விளைவுகளை சரிசெய்ய தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
0 Comments