Subscribe Us

header ads

பொலிஸாருக்கும், பாலித்த தெவரப்பெருமவிற்கும் இடையே மோதல் (வீடியோ இணைப்பு)

பொலிஸாருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்ற சம்பவம் மத்துகம பிரதேசத்தில் இன்று பதிவாகியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.பி பாலித்த தெவரப்பெரும தனது ஆதரவாளர்களின் பட்டாளத்துடன் வாக்களிப்பதற்காக இன்று காலை வாகனப் பேரணியில் சென்றுள்ளார்.

இதன்போது அவர்களது வாகனப் பேரணியை பொலிஸார் இடைமறித்தநிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.

சிறிதுநேரம் பொலிஸாருக்கும், தெவரப்பெருமவிற்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் மூண்டது.

அதன் பின்னர் பொலிஸார் அங்கிருந்து கலைந்துசெல்ல முற்படுகையில் நடுவீதியில் நிறுத்தியிருந்த தனது ஜீவ் வண்டியில் மேல் ஏறிய பாலித்த தெவரப்பெரும, பொலிஸார் மீது தகாத வார்த்தைக்கொண்டு விமர்சித்ததாக கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments