கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு
வழங்கப்பட்ட ஒரு வார கால விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு
நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சர் டலஸ் அழகபெரும அறிவித்துள்ளார்.
அதற்கமைய
பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்
எட்டப்பட்டுள்ளது. தரம் 11, 12 மற்றும் 13ஆம் வகுப்பு மாணவர்களுக்கே
எதிர்வரும் 27ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எனினும்
ராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து
பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி வரை விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க
வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி
அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மீண்டும் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளை
ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக
கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருந்தது.
இதனை
தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல்
நேற்று வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து,
கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம்
உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு
கலந்துரையாடியிருந்தது.
இந்த நிலையில் அதற்கு உரிய பதில் கிடைக்க பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள்
மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும் காலம் ஜுலை 31 வரை
நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருந்தது.
இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் கடந்த திங்கட்கிழமை முதல் நேற்று வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கலந்துரையாடியிருந்தது.
இந்த நிலையில் அதற்கு உரிய பதில் கிடைக்க பெற்றுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2019 கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்கும் காலம் ஜுலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments