Subscribe Us

header ads

புத்தளம் தப்போவ இராணுவ தம்பதியினரின் மனிதாபிமான செயல் பாராட்டுக்குறியது


ஜூம்ஆ -03-07-2020- முடிந்து புத்தளம் பெரிய பள்ளியில் இருந்து வெளியே சென்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் வாயிலில் நின்ற அங்கவீனர்கள், ஏழ்மையான வயோதிபர்கள், மாதர்கள் ஆகியோருக்கு உணவுப் பொதிகளை வழங்கினர். 

சிலருக்கு பணமும் வழங்கினர். 

பார்த்துக் கொண்டிருந்து விட்டு அருகில் சென்று அவர்கள் யார் என விசாரித்து விட்டு மீண்டும் மீண்டும் பாராட்டினேன். 

நன்றி தெரிவித்தேன். 

உணர்வுபூர்வமான விடயம் என்றேன். 

அவர்களது முகங்கள் மலர்ந்தன. 

தாயார் நான்கு வருடங்களுக்கு முன்னர், மரணித்து விட்டார் என்றனர். 

கிளிநொச்சி இராணுவத்தில் சேவையாற்றுகிறேன் என்றார். 

அவர்கள் புத்தளம் தப்போவ எனும் இடத்தை சேர்ந்த சிங்கள தம்பதியினர்.

அல்லாஹ்வின் பாதுகாப்போடு செல்லுங்கள் என்று வழியனுப்பி வைத்தேன் 

"படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம்" الخلق عيال الله

Mohamed Muhsi

Post a Comment

0 Comments