பூங்காக்களில் பார்பிக்யூ (Barbecue) மற்றும் ஷிஷா (Shisha)
உபயோகத்திற்கு சவூதி அரசு தடை விதித்துள்ளது. மீறுவோருக்கு 100 சவூதி
ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் பார்பிக்யூ மற்றும் ஷிஷா
உபயோகத்திற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ நெருப்புப் பற்ற
வைப்பவர்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் என சவூதி
நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளை முதன்முறையாக மீறுவோருக்கு அபராதமாக 100 சவூதி
ரியால்களும், தொடர்ந்து மீறுபவர்களுக்கு அபராதம் இரட்டிப்பாக்கப்பட்டு 200
சவூதி ரியால்களும் வசூலிக்கப்படும் என அமைச்சகம் அறிவித்துள்ளது.
தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் தங்களையும் பிறரையும்
பாதிப்புக்குளாக்கும் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் பொது
இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம்
எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments