Subscribe Us

header ads

Haroine Dealer : மகன் வழங்கிய துப்பால் பொலீசாரிடம் சிக்கிய அம்மா

ஒரு கிலோ கிராமும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் களனிமுல்ல பிரதேசத்தில் நேற்று பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண்ணை குறித்து தகவல் வழங்கிய நபர் அண்மையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்படடதாகவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் புதல்வர் எனவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட பெண்ணும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

Post a Comment

0 Comments