வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் மீண்டும் நாடு திரும்ப
எதிர்பார்த்துள்ளவர்களை அழைத்து வருவதற்காக அரசாங்கத்தின் தலையீட்டில்
முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டத்தை நிறுத்துவது என
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்டுள்ள
நெருக்கடியான நிலைமை காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும்
வேலைத்திட்டங்கள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அத்மிரல் ஜயநாத்
கொழம்பகே தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது இட
வசதிகள் குறைவாக காணப்படுவதுடன், கந்தகாடு புனர்வாழ்வு முகாமுடன்
தொடர்பில் இருந்த நபர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தல்
நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் வரை மாத்திரம் மேற்கொள்ளப்படும்.
இதன்
பின்னர் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள்
நிறுத்தப்படும் எனவும் ஜயநாத் கொழம்பகே குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த
சில தினங்களில் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், மத்திய
கிழக்கு, மாலைதீவு உட்பட நாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப
எதிர்பார்த்துள்ளனர்.
0 Comments