கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்து வெற்றி கண்டிருப்பதாக ரஷியா அறிவித்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது செலுத்தி ரஷியா வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது.
இதுபற்றி ரஷிய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டுள்ளது.
மனிதர்கள் மீது உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் முழு வெற்றி கிடைத்திருக்கிறது.
இதன்மூலம் குணமடைந்தவர்களின் முதல் குழுவினர் வரும் 15ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர். இரண்டாம் குழுவினர் 20 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் இருக்கும் தடுப்பு மருந்துகளைப் போன்று பாதுகாப்பான அம்சங்களை புதிய தடுப்பு மருந்தும் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மருந்தின் பெயர் மற்றும் விற்பனைக்கு வரும் தேதி ஆகியவை பற்றி தெரிவிக்கப்படவில்லை.
0 Comments