இந்த குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் கடந்த வாரத்தில் சாட்சியமளித்த செத் சரன அமைப்பின் பிரதிநிதியான வணக்கத்துக்குரிய தந்தை லோரன்ஸ் ராமநாயக்கவினால் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் வேல்ட் லீக்கின் தலைவர் ஷேக் மொஹமட்பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸாவிடம் இருந்து 5 மில்லியன் டொலர்களை தாம் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
5 மில்லியன் டொலர்களை தருவதாக வேல்ட் முஸ்லிம் லீக்கின் தலைவர் தாமரைத்தடாகம் மண்டத்தில் நடைபெற்ற தேசிய சமாதான மாநாட்டின்போது உறுதியளித்திருந்தார். இதற்கான ஆவணங்களும் வேல்ட் முஸ்லிம் லீக்கினால் கையளிக்கப்பட்டுள்ளன. எனினும் பணம் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
பாதிப்புக்கள் தொடர்பில் வேல்ட் முஸ்லிம் லீக் கோரிய ஆவணங்களை இலங்கை அரசாங்கம் கையளிக்காமை காரணமாகவே அந்த நிதியுதவி கிடைக்கவில்லை என்று மைத்திரிபால சிறிசேன தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Comments