Subscribe Us

header ads

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன் திறக்க ஏற்பாடு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு  அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாடுகளில் நிர்க்கதியாக உள்ள இலங்கையர்கள் அனைவரையும் அழைத்து வர எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது இலங்கையில் நடைமுறையில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களின் இடவசதியை பொறுத்தே அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சுமார் 20ஆயிரம் இலங்கையர்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.

ஏற்கனவே 10ஆயிரம் பேர் வரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments