Subscribe Us

header ads

உஷார் : கொரோனா பரிசோதனைக்கு வருவதனை போன்று வீடுகளுக்குள் கொள்ளை

கொரோனா பரிசோதனைக்கு வருவதனை போன்று வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் இராணுவ ஆடைகளை அணிந்து வரும் கொள்கையர்கள், கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதாக கூறி வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த இருவரை கொச்சிக்கடை பொலிஸார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை,கோன்கொடமுல்ல பிரதேசத்தில் உள்ள பல வீடுகளில் இரவு வேளையில் கொள்ளையடிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இரவு வேளையில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்குள்ளவர்களை அறைக்குள் அடைத்து வைத்து அச்சுறுத்தி 10 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேக நபரிடம் இருந்து 7 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வாடகை அடிப்படையில் பெற்ற 4 வாகனங்கள், 2 கையடக்க தொலைபேசிகள், இராணுவ மற்றும் பொலிஸ் சீருடைகள் இரண்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Post a Comment

0 Comments