Subscribe Us

header ads

கொரோனாவின் இரண்டாம் கோரத்தாண்டவ அலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்கும் சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறைகளின் பொறிமுறைமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 நோய்த் தொற்றை தடுக்க அரசாங்கம் சிறந்த பொறிமுறைமை ஒன்றை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புறச் சமூகத்திலிருந்து கொரோனா தொற்றாளிகள் எவரும் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலம் நோய் தொற்றின் இரண்டாம் அலை உருவாகுவதனை தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரதும் பொதுமக்களினதும் ஒத்துழைப்பு காரணமாக நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடிந்துள்ளது என அவர் தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments