உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 200க்கும் மேற்பட்ட
நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகளவில் 75.9 லட்சம் பேர்
பாதிக்கப்பட்டு 4.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் 38.4
லட்சம் பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், உலகின் 9 நாடுகளான
நியூசிலாந்து,தான்சானியா,வத்திக்கான், பிஜி தீவு, மான்டி நெக்ரோ, சீசெல்ஸ்,கிழக்கு திமோர், பபுவா நியூகீனி கொரோனா இல்லாத
நாடுகளாக அறிவித்துள்ளன.
48.9
லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்தில் 1,504 பேர் கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டு 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசி நோயாளியும் ஜூன்
8ம் திகதி குணமடைந்தார்.
தான்சானியாவில் 509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 29 பேர் உயிரிழந்திருந்தனர்.
9 லட்சம் பேர் வாழ்கின்ற ஃபிஜி தீவில் 45 நாட்களாக புதிதாக
யாருக்கும் தொற்று ஏற்படாததால், 100 சதவீதம் கொரோனா அற்ற நாடு என பிரதமர்
பிராங் பைனிமாரமா அறிவித்தார்.
சிறிய நாடான வத்திக்கானில் 12 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டனர். அதில் கடைசி நோயாளியும் குணமடைந்ததை அடுத்து கடந்த 4ஆம்
திகதி கொரோனா இல்லாத நாடாக அறிவித்தது.
மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள கிட்ஸ் அண்டு நெவிஸில் மொத்தமே
15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாடு சென்று
திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து நோயாளிகளும் கடந்த 19ம்
திகதி குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
0 Comments