கல்பிட்டி நினைவுகள் - 7
கண்டி மற்றும் சிங்கள இராச்சியங்கள் உப்பு க்காகத் தொடர்பு வைத்திருந்த பழமையான இடங்களில் புத்தளம் முக்கிய மான தாகும். புத்தளம் நகரின் மிகப் பழமையான தொழில் உப்பு ச் செய்கையாகவே இருந்து ள்ளது.
கண்டி இராச்சியத்திலிருந்து உப்பைப் பெறுவதற்காகத் தவளம் மாடுகள் புத்தளம் வந்து போனதில் இருந்து தான் புத்தள த்திற்கான தவளம் ஆரம்பித்து இருக்கலாம்.சிங்கள இராச்சியங்களுக்கான உப்பின் தேவை நாம் நினைப்பதைவிட அதிகமான தாகும். உணவுக்காக மட்டும் அன்றி இசைக்கருவிகளுக்கான தோல் பதனிடுதல், வெடிமருந்துகள் தயாரிப்பு, விகாரை தேவாலயங்களுக்கான தேவை போன்ற வற்றையும் குறிப்பிடலாம்.
புத்தளம் நகரின் பழமையான உப்பளம், புத்தளம் முஸ்லிம்களுக்கு சொந்த மான தனியார் உப்பளமாகும் . இன்றும் அது நாட்டின் உப்பு உற்பத்தி யில் முன்னணி யில் இருந்து வரும் முக்கிய மான உப்பளங்களில் ஒன்று. மேலும் பழமையான பல உப்பளங்கள் புத்தளம் மாவட்டத்தில் உள்ளன.
புத்தளம் நகரின் ஆரம்ப அல்லது பூர்வீக குடியேற்றம் இந்த உப்பு வாய்க்கால் பகுதி யில் நடந்திருக்கலாம். புத்தளம் நகரின் முதல் பள்ளிவாசல் என்று கருதப்படும் பாரிஅப்பா பள்ளிவாசல் இங்கு தான் இருக்கிறது. இப்பள்ளியுடன் ஒரு ஸியாரமும் இருக்கின்றது. மன்னார் பாதையின் வழியாக புத்தளம் நகரிற்குள் பிரவேசிக்கும் போது ( இரு மைல் களுக்கு முன்னால்) இன்றும் புத்தளம் உப்பளத்தையும் பாரியப்பா பள்ளிவாசலையும் பார்க்க லாம். இங்கிருந்து சிறிது தூரத்தில் திஸ்ஸவெவ என்ற நெடுங்குளமும் மன்னார் பாதை வழியாக இரண்டு மைல் தொலைவில் விலுக்கை ஆறும் அதன் கிளைகளும் உள்ளன.
இவை மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்கும் வயல் செய்கைக்கும் ஆதாரமாக இருந்து ள்ளன. புத்தளம் நகரைச்சேர்ந்த பலருக்கு விலுக்கைப்பகுதியில் வயல் காணி கள் இருந்தன. பிற் காலத்தில் இக்காணிகள் நீர் பற்றாக்குறையால் கைவிடப்பட்ட தாகத் தெரிகிறது.1960கள் வரை மக்கள் நெற் செய்கை யில் ஈடுபட்டிருந்தனர்.எனது மனைவியின் தந்தைக்கும் வயல் காணி இருந்தது.
ஆனால் இங்கு வாழ்ந்தவரகள் குறிப்பிட்ட காலத்தில் ( 16ம் நூற்றாண்டிற்கு முன்னரே ) வணிகத்தில் செழிப்படைந்து கொண்டிருந்த துறைமுகம் இருந்த இடத்திற்கு அருகில் தமது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டனா். பாரியப்பா பள்ளி பல வருடங்களாகத் தனித்து விடப்பட்ட தை நான் பார்த்திருக்கிறேன்.
வணிகத்திற்காக இந்தியா வில் இருந்து வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. பழைய பள்ளிவாசல் களையும் முகையதீன் தர்கா வையும் பராமாிப்பதில் இவ்வர்த்தகர்கள் அதிக கவன ம் செலுத்தி னர். இமாம்களையும் முஅத்தின்களையும் இவர் கள் தமிழ் நாட்டில் இருந்து அழைத்து வந்தனர். மலையாளத்தில் இருந்தும் மார்க்க சேவைகளுக்காகப் பலர் இங்கு வந்துள்ளனர்
இந்திய வணிகர்களும் பல்வேறு தரப்பினரும் மிக நீண்ட காலமாகஇங்கு வந்து தமது தொழில் துறை களில் ஈடுபட்டிருந்ததும் இங்கு வாழ்ந்ததும் ஒரு வரலாறு தான்.
16 ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரின் அடக்குமுறை களுக்கும் பழிவாங்கும் முயற்சிகளுக்கும் அஞ்சிய கொழும்பு முஸ்லிம்கள் பாதுகாப்புக்காகப் பல்வேறு இடங்களை நோக்கி நகர்ந்தனர். அந்த இடங்களில் புத்தளமும் ஒன்றாகும். துறை முக வசதியோடு குருணாகல், அனுராதபுரம்,மன்னார் ப் பாதைகளும் கொழும்பு ப் பாதையும் புத்தளம் நகரில் சந்தித்தன.இது புத்தளம் நகரின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரியவாய்ப்புகளை வழங்கியது. வரலாற்றுப் புகழ் மிக்க தவள வணிகப் பாதைகளில் புத்தளம் - குருணாகல், புத்தளம் - கண்டி தவள வணிகப் பாதைகளுக்குப் பெரிய முக்கியத்துவம் இருந்தது.
14ம் நூற்றாண்டில் இலங்கை வந்த இப்ன் பத்தூதா கப்பலில் இருந்து தரை இறங்கிய பத்தாலா(Bttala ) என்ற இடம் புத்தளம் என்றே கருதப்படுகிறது. சிங்கள மன்னர்கள் காலத்தில் களஞ்சிய சாலையை அல்லது திறைசேரியைக் ( treasury ) கொண்டிருந்த அரச கிராமங்களில் ( Royal villages) ஒன்றாகவும் புத்தளம் விளங்கியது.
கல்பிட்டித் துறைமுகத்தையும் புத்தளம் துறைமுகத்தை யும் தமது ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்கு க் கண்டி மன்னர்கள் இறுதி வரைப் போராடினர். முஸ்லிம்கள் உள்ளிட்ட இப்பிரதேச மக்களின் ஆதரவை யும் அவர்கள் எதிர்பார்த்தனர். அவர் களோடு நல்லுறவை ப் பேணி வந்தனர். போர்த்துகேயர் கல்பிட்டியைக் கைப்பற்றி யதையும் உள்ளூர் கோவில்களை இடித்து கிறிஸ்தவ கோயில்களைக் கட்டி யதையும் கட்டமுயன்றதையும் எதிர்த்தனர்.
1536ல் புத்தளத்தைப் போர்த்துககேயர் கைப்பற்றி னர். அங்கு முக்கிய மான இடத்தில் பெரிய தேவாலயம் ஒன்றை நிறுவியதோடு மதப்பரப்புகைக்கான மத்திய நிலையம் ஒன்றை யும் அதில் தாபித்தனர். (தொடரும்). msm anes
0 Comments