Subscribe Us

header ads

கல்பிட்டி வரலாற்று சுவடுகள் - 6

http://www.kalpitiyavoice.com/2020/06/4.html (part 4)
http://www.kalpitiyavoice.com/2020/06/5.html (part 5)

உத்தியோக பூர்வமான பள்ளிவாசல் வரலாற்றிலும் காணி உறுதிகளிலும் மூத்த பிரஜை களின் நினைவுகளிலும் மீரா உம்மா வின் பெயரும் பள்ளிவாசல் களுக்கும் தர்காவுக்கும் அவர் வழங்கிய காரணிகள் பற்றிய பதிவுகளும் உள்ளன. அவர் யார்? அவரது பின்னணி என்ன? இக்கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

கி டைத்துள்ள தகவல்களின்படி தர்காவுக்குக் காணி வழங்கி யதோடு தர்காவை க்கட்டியதும் மீரா உம்மா தான். தர்காவை க் கட்டி அதில் கூடு எடுக்க வேண்டும் என்று ம் அவர் விரும்பி உள்ளார். முகையதீன் ஆண்டகை தர்கா கட்டப்பட்டு கூடும் எடுக்க ப் பட்டு ள்ளது. இது 15 ம் அல்லது 16 ம் நூற்றாண்டில் நடைபெற்று ள்ளது.

மீரா லெப்பை பள்ளிவாசல் ( மீரா மக்காம் பள்ளிவாசல் என்றும் இது அழைக்கப்பட்டுள்ளது ) , இதற்கு சற்றுத் தொலைவில் மெளலாமக்காம் பள்ளிவாசல், கங்காணிகுளம் பள்ளிவாசல் .இவை மீரா உம்மா வின் காணி லேயே இருந்தன. மீரா லெப்பை, மீரா உம்மா என்பவர் கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா?


மெளலாமக்காம் பள்ளிவாசல் 1880 இல் திருத்தி அல்லது புதிதாகக் கட்டப்பட்டது. அதற்கு முன்னதாக இந்த இடத்தில் வேறு ஒரு பள்ளிவாசல் இருந்து ள்ளது .இதற்கான காணி யை மெளலா மீரா நாச்சியார் அன்பளிப்பு ச் செய்து ள்ளார். அவர் முகையதீன் தர்கா வுக்கு காணி வழங்கி ய அதே மீரா உம்மா வின் சகோதரி. அங்கிருந்த பழைய பள்ளிவாசல் 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்க வேண்டும். மெளலாமக்காம் என்பதில் இருக்கும் மெளலா என்பது அந்த ப் பெயராக இருக்கலாம். காணி உரிமையாளருடையது என்று நம்பப் பட்ட கபுறடி ( அடக்க இடம்) ஒன்று மெளலாம் மக்காம் பள்ளி க்கு அருகில் 1993 வரை இருந்து ள்ளது. பின்னர்,1880ல் கட்டப்பட்ட பள்ளிவாசல் இடிக்கப்பட்டு 2000ம் ஆண்டளவில் புதிய பள்ளிவாசல் இதே இடத்தில் கட்டப்பட்டது.

கட்டிட நிர்மாணவேலைகளை மேற்பார்வை செய்த எனக்கு த் தெரிந்த ஒரு வர் கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் நடந்த சந்திப்பின்போது பின்வருமாறு கூறினார்: அஸ்திவாரம் தோண்டிய போது ஆழத்தில் புதைந்து இருந்த அரபு மொழி எழுத்து கள் பொறிக்கப்பட்ட மீஸான் நடுகற்களைக்கண்டோம். சில நாட்கள் வெளியே எடுத்து வைத்து இருந்து விட்டு மீண்டும் அஸ்திவாரத்தினுள் போட்டு மூடி விட்டோம். அதற்கு அவர் சொன்ன காரணங்கள் ஏற்கக்கூடாது இருக்க வில்லை.

மீரா உம்மா வுக்கும் அந்த காணி க்கும் இருந்த தொடர்பு பற்றி யும் காணி உறுதி பற்றியும் என்னிடம் பேசினார்.

16ம் நூற்றாண்டில் புத்தளம் நகரில் 4 பள்ளிவாசல் களாவது இருந்துள்ளன.அந்த நேரத்தில் தான் முகையதீன் தர்கா கட்டுவதற்காக மீரா உம்மாவினால் ரேகடிப்பாலத்திற்கு அருகில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த இடத்தில் ( கடல்கரையருகில்) முகையதீன் ஆண்டகை யை நினைவு படுத்தும் வகையில் சில தர்கா வழி பாடுகள் நடந்து வந்திருக்கலாம். துறைமுகங்களுக்கு அருகில் பள்ளிவாசல் அல்லது தர்கா இருப்பது வழமை.
தென் ஆசியா வில் செல்வாக்கு ள்ள சூபிப் பாதையின் நிறுவனரும் காதிரியா தரீக்காவின் தலை வரும் இலங்கை முழுக்க முஸ்லிம் களால் கண் ணியப்படுத்தப்பட்டவரும் சூபிஞானத்திலும் மார்க்க அறிவிலும் பெரிய அறிவு பெற்ற வர் என்று புகழப்பட்டவருமான பக்தாதைச்சேர்ந்த முகையதீன் அப்துல் காதர் ஜெய்லானி பேரில் தான் அந்த தர்கா அமைக்கப்பட்ட து. ஹிஜ்ரி 470ல் (கிபி 1077ல்) அவர் ஜீலானில் பிறந்தார்.
புத்தளம் பிரதேசத்தில் தரீக்காகலாசாரத்திற்கு பெரிய முக்கிய தத்துவம் தரப்படவில்லை. எனினும் காதிரி யா தரீக்காவுக்கு அல்லது முகையதீன் ஆண்டகைக்கு இப்பகுதியில் ஓரளவு செல்வாக்கு இருந்திருக்க வேண்டும்.அன்று கட்டப்பட்ட பள்ளிவாசல் கள் பல முகையதீன் கொத்து பா பள்ளிவாசல்கள் என்று தான் அழைக்கப்பட்டன. இன்று ம் அதேபெயர் தொடர்வதைக் காணலாம். இன்று ள்ள புத்தளம் பெரிய பள்ளிவாசலின் பெயரும் முகையதீன் கொத்து பா பள்ளிவாசல் தான்.
பலாங்கொடையில்( கூரகலையில்) மலைகளின் சுற்றாடலில் அமைந்துள்ள தப்தர் ஜெய்லானி , முகையதீன் அப்துல் காதர் ஜெய்லானி நினைவாக இலங்கையில் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வழி பாட்டிடம் . நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சூபிகளும் பொது மக்களும் இங்கு வருகின்றனர். முகையதீன் ஆண்டகை பல வருடங்களாக இங்கு தியானத்தில் ஈடுபட்டிருந்தார் என்று ஒரு ஐதீகமும் உண்டு.
14 ம் நூற்றாண்டில் இலங்கை வந்த இப்னு பதூதா அவரது பாவா ஆதம் மலை( சிவனொளி பாத மலை) பயணம் பற்றிய விவரங்களில் இது பற்றி யும் சில அடையாளங்களை விட்டு ச் சென்றுள்ளார். ளார். அக்காலத்தில் பாவா ஆதம் மலை செல்லும் முஸ்லிம் பயணிகள் தப்தர் ஜெய்லானி செல்வதையும் வழக்கமாக க் கொண்டிருந்தனர். (தொடரும்). msm anes

Post a Comment

0 Comments