பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் 1000 ரூபா வேதனம்
ஏற்புடையதல்ல. எனினும் 1000ரூபா கோரிக்கை ஏற்கனவே
முன்வைக்கப்பட்டுள்ளமையால் அது தொடர்பில் பேச வேண்டியுள்ளதாக முன்னாள்
ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு
அவர் வழங்கிய விசேட நேர்காணலின்போது பல வருடங்களுக்கு முன்னர் இந்த 1000
ரூபா வேதன உயர்வுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எனினும் தற்போதும்
1000 ரூபா வேதன உயர்வே கோரப்படுகிறது. பெருந்தோட்ட மக்களின் பிரச்சனைகளை
நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
என்று லங்காசிறியின் இன் செய்தியாளர் அலுத்கமகேயிடம் கேட்டபோதே அவர் இதனை
தெரிவித்தார்.
இதேவேளை பெருந்தோட்ட நிறுவனங்கள் 1000 ரூபா வேதனம்
வழங்காதுபோனால் அவற்றின் தோட்டங்களை அரசாங்கம் கையேற்கும் என்றும் அவர்
குறிப்பிட்டார். -tw-
0 Comments