http://www.kalpitiyavoice.com/2020/06/6.html (part 6)
http://www.kalpitiyavoice.com/2020/06/7-123456.html (part 7)
http://www.kalpitiyavoice.com/2020/06/8-1234567.html (Part 8)
http://www.kalpitiyavoice.com/2020/06/9-1-8.html (Part 9)
http://www.kalpitiyavoice.com/2020/06/7-123456.html (part 7)
http://www.kalpitiyavoice.com/2020/06/8-1234567.html (Part 8)
http://www.kalpitiyavoice.com/2020/06/9-1-8.html (Part 9)
நரேந்திர சிங்கன் புத்தளம் வந்த நிகழ்வு முன்னர் 2ம் இராஜசிங்கன்( 1635 -1687 ) புத்தளம் வந்த நிகழ்வு அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தாகும். புத்தளம் வரலாற்றை ப் பொறுத்தவரை யும் குறிப்பாக முஸ்லிம் களின் வரலாற்றைப் பொறுத்தவரை யும் கூட இது முக்கிய நிகழ்வாகும்.
கறுவலகஸ்வெவ வரை வந்து புத்தளம் மன்னார் பாதையின் 6 ம் கட்டை அல்லது அம்பலம் வழி யாகவே நரேந்திர சிங்கன் புத்தளம் நகரை அடைந்திருக்கலாம். அதாவது மன்னார் வீதி பாரி அப்பா பள்ளிவாசலைக் கடந்து புத்தளம் தர்காவை நோக்கி அப்பயணம் நடந்து இருக்கலாம். அவ்வழியேதான் மன்னன் புத்தளம் சென்ற தாகவும் மன்னர் வழங்கிய வாள் ஒன்று அப்பிரதேசதைச் சேர்ந்த ஒருவரிடம் இருப்பதாக வும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன். (தகவல் சேகரிப்பு நடந் து வருகிறது )ஆனை மடுப்பாதையில் மீஒயா நதிவழியாக அமைந்த கண்டி ப் பெருவழி ஒன்றுள்ளது.அன்று இவற்றிற்கு இடையே தொடர்பு கள் இருந்து இருக்கலாம்.
கிடைக்கின்ற தகவல்களின் படி கறுவல கஸ்வெவ அல்லது செல்லங்கண்டல் ஆறு ஓடும் பகுதியை மன்னரும் பரிவாரங்களும் நெருங்கிய போது அவர் களுக்கு ஒரு உயிர் ஆபத்து காத்திருந்தது. புத்தளம் - கல்பிட்டி பிரதேசத்தின் ஆதிக்கம் அப்போது ஒல்லாந்தரின் கைகளில் இருந்தது. புத்தளம் மாவட்டம் மீதான கண்டி மன்னனின் ஆதிபத்தியத்திற்கு அது வெளிப்படையான சவாலாகும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதிரடியாகக் கண்டி மன்னன் புத்தளத்திற்குப் படைகளை அனுப்ப லாம் என்ற அச்சத்தில் ஒல்லாந்தர் இருந்த சமயத்தில் தான் புத்தளம் நகரின் ஊடாக நாவல் காடு ( அதாவது கல்பிட்டி) நோக்கித் தனது பயணத்தை கண்டி மன்னன் ஆரம்பி க் கின்றான்.
அப்போது புத்தளத்திலும் கல்பிட்டியிலும் ஒல்லாந்தரிடம் சக்தி வாய்ந்த படையணிகள் இருக்க வில்லை. எவ்வாறு இருந்தாலும் நான் முன்னர் குறிப்பிட்ட இடங்களில் மன்னரையும் பரிவாரங்களையும் மறித்து அதிரடியான தாக்குதலை நடத்தும் திட்டம் ஒன்று இருந்துள்ளது. (புத்தளம் நகரில் இருந்து அந்த இடம் சுமார் 10,12, மைல் கள் தூரம் இருக்கும்).
இந்த சதித்திட்டத்தை அறிந்து கொண்ட புத்தளம் முஸ்லிம்கள் மன்னருக்கு இதைத் தெரியப்படுத்துகின்றனர். அந்த ஆபத்தில் இருந்து மன்னனைக் காப்பாற்றும் முயற்சியிலும் அவர்கள் பங்கேற்கின்றனர்.
இதனால், மகிழ்ச்சியடைந்த மன்னன் புத்தளம் முஸ்லிம் தலைவர்களை சந்திக்கிறான். பல பரிசில் களையும் அரச சின்னங்களை யும் நன்றி க்கடனாக அவர்களுக்கு வழங்குகின்றான். காசி செட்டி , முஸ்லிம் தலைவர்களை மன்னன் நரேந்திர சிங்கன் நல்லெண்ணப் பரிமாற்ற நோக்கில் சந்தித்ததாக மட்டுமே குறிப்பிட்டுள்ளார். இது ஒரு வரலாற்று ப் புகழ் மிக்க சந்திப்பாகும்.
இச்சந்திப்பில் பங்கேற்ற முஸ்லிம் தலைவர்கள் யார் என்ற விபரங்கள் தெரியவில்லை. புத்தளம் தர்கா விலும் மீரா லெப்பை பள்ளிவாசலிலும் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக இருந்த மரைக்காயர்களும் வணிகப் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டு இருக்கலாம்.
மன்னன் புத்தளம் நகர மக்களுக்கு வழங்கிய பொருள்கள் , பெரும்பாலும் அனைத்தும் தர்கா வின் கலாச்சாரத் தேவை களுக்குரியவையாகும். காசி செட்டி யின் கருத்து ப்படியும் அவை தர்கா வைக் கருத்திற் கொண்டு வழங்க ப்பட்ட வைதான். பல ரின் நல்லெண்ணஙகளைக் கவரக்கூடிய தாக அந்த தர்கா பிரசித்தமானதாக இருந்து ள்ளது. 400 வருடங்கள் பழமையான அதன் வருடாந்த கூடு, கொடி வைபவங்களாலும் அதற்கு ஒரு பெயர் இருந்தது. மீரா உம்மா வின் விருப்பப் படி புத்தளம் முன்னோர்கள் இதனைச் சிறப்பாக நடத்தி வந்துள்ளனர்.
தர்கா, தற்போது ள்ள பெரிய பள்ளி ஆவணங்கள் , மக்கள் தரும் தகவல்கள் ஊடாக பல வரலாற்று சம்பவங்களை அறிந்து கொள்ள, ஊகிக்க வாய்ப்பு க்கள் உள்ளன. இவற்றிற்கும் மேலாக காசி செட்டி யின் பதிவுகளும் உள்ளன.
காசி ச் செட்டி பின்வருமாறு கூறுகிறார் " நாவக்காடு செல்லும் வழியில் புத்தளம் சென்ற போது சோனகத் தலைவர்கள் அந்த சந்தர்ப்பத்தில் நடந்து கொண்ட விதத்தினால் ( அவர்கள் வழங்கிய சிறப்பான வரவேற்பினால் ) மகிழ்ந்த மன்னன் நரேந்திர சிங்க அவர்களுக்கு கண்டி அரச அதிகாரச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடி ஒன்றையும் இரு வெண் சாமரங்களையும் 18 வெள்ளிக் குஞ்சங்களையும் சமய ஊர்வலங்களில் கொண்டு செல்வதற்காக அவர்களின் பிரதான பள்ளிவாசலுக்கு ( principal mosque ) அன்பளிப்பு செய்தான் . " - anes-
0 Comments