Subscribe Us

header ads

ஜனாதிபதி தேர்தலில் போட்டி - சர்வதேச ஊடகத்திடம் உறுதி செய்த ஹிஸ்புல்லா


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பிபிசி சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“எங்களின் எந்த பிரச்சினைக்கும் தீர்வு வழங்க முடியாமல் போனது. அதனால் நாங்கள் போட்டியிட்டு இரண்டாம் விருப்பத்தை பெற்று அதன் ஊடாக பிரச்சினையை தீர்த்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். அதனால் தகுதியான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொள்வோம். அந்த வேட்பாளர் நானாகவும் இருக்கலாம். அதிகமானோர் என்னை போட்டியிடுமாறு அழைக்கின்றார்கள்.

ஜனாதிபதியாவதற்கு நான் தேர்தலில் போட்டியிடவில்லை. அதிகம் வாக்குகளை பெறும் வேட்பாளருடன் இணைந்து இரண்டாம் இடத்தை பெறவே நாங்கள் முயற்சிக்கின்றோம். அதன் மூலம் எங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும்.

தற்போது அரசாங்கத்துடன் செயற்படும் முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்துரையாடல் மேற் கொண்டு வருகின்றோம். எனினும் முஸ்லிம் தலைவர், மத பிரதானிகள், சிவில் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களுடன் இது தொடர்பில் பேசவுள்ளோம்” என ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments