தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா தனியார் பள்ளி கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா காரணம். ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை 6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி நாடுமுழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை 12 மாணவர்களுக்கு 1ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது)*
க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8 தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது அனுமதி வழங்கப்படவில்லை கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான் ஆண்களுக்கு இணையான சம்பளம்
மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது. தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா
உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது. மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான். உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்
*2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள் இன்று வீடில்லாதவர் க்யூபாவில் யாருமில்லை. யாருக்கும் சொத்து வரி கிடையாது. வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.காரணம் ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை*
'"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்" - 1953 ஆம் ஆண்டு மோன் காடா தாக்குதலில் 76 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு பின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து இப்படிக் கேட்கிறார்.
"ஆம், எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் 'சே'-வைப்போல ஃபிடல் காஸ்ட்ரோ-வைப் போல இருப்போம்"
வரலாறு என்னை விடுதலை செய்யும்
சகாப்த நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ
0 Comments