நாடு குட்டிச்சுவராய்ப் போய்விட்டது” என்பது நாட்டு மக்கள் எல்லோரினதும் பொதுவான அபிப்பிராயம். இப்போது ஆட்ச்சியில் இருக்கும் யாருக்குமே தலை கால் புரியவில்லை. A to Z எது சட்டரீதியானது, எது சட்டத்துக்குப் புறம்பானது என்று எதுவுமே தெரியவில்லை. நேற்று இத்தாலியில் என்று நினைக்கிறேன் ஒரு மத வைபவத்தில் பேசுகையில் சங்கைக்குரிய கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் பேசும்போது ”நீங்கள் இருந்தது போதும். இனி இருக்க உங்களுக்குத் தகுதி இல்லை. போய்விடுங்கள்” என்று கூறினார் . அதை செவியுற்ற யாருக்கும் இரண்டாம் கருத்துக்கு இடம் இருக்காது. அவர் குறிப்பிட்டது நாம் தெரிவு செய்த 224 பேரையும்தான் குறிக்கிறது என்று.
நாட்டு ஆட்சியில் அவசர மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்று மக்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றமும் போய்விடவேண்டும், ஜனாதிபதியும் போய்விட வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஒத்த கருத்துத்தான் இருக்கிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தலும் . ஜனாதிபதி தேர்தலும் உடனடியாக நடக்க வேண்டும் என்றுதான் சர்வஜன வாக்குரிமை பெற்ற ஒவ்வொருவனும் நினைக்கிறான். இந்த நேரமாகப் பார்த்து தேர்தல் ஆணைய தலைவர், இந்நாட்டு ஜனநாகயத்தைப் பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டு மாகாண சபை தேர்தல் உடனடியாக நடாத்தப்படா விட்டால் தாம் உடனடியா பதவியை கைவிடுவதாக சொல்லி மக்கள் அபிப்பிராயத்துக்கு மண் அள்ளிப் போட முயல்வதாகத் தெரிகிறது.
இந்த நாட்டுக்கு இந்த மாகாண சபைகள் பெரும் பாரம் என்பது மக்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் இப்போது அது பற்றி வாய் திறக்கவில்லை. இந்த ஓய்வுவெற்ற முன்னாள் தேர்தல்கள் ஆணையாளருக்கு புத்தி தடுமாறிப் போனதோ தெரியவில்லை. இந்த நேரத்தில் மாகாண சபை பற்றி பேசி எல்லாவற்றையும் தலை கீழாக மாற்ற முனைகிறார்.
இன்று ஒருவரின் முக நூல் பதிவில் கண்ட நமது புத்தளம் மாவட்டத்தின் வெண்ணப்புவ பிரதேச சபையின் தீர்மானம் என்னை உறைய வைத்தது. அதன் சாரம் இதுதான்.
” தங்கொட்டுவ வாராந்த சந்தை தற்போது வெண்ணப்புவ பிரதேச சபையால் நடாத்தப்பட்டு வருவதுடன் நாட்டில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பல பிரதேசங்களிலும் பிரச்சினகைள் தோற்றியுள்ளன. இது வரையில் தங்கொட்டுவ வாராந்த சந்தை எல்லைக்குள் வரும் வியாபாரிகள் மத்தியில் முஸ்லிம் வியாபாரிகளும் உள்ளதால் அதற்கு பிரதே மக்களும், வியாபாரிகளும் தமது கடும் எதிர்ப்பை என்னிடம் தெரிவித்துள்ளார்கள். அது இப்போது நிலவும் அமைதிக்கு பங்கம் ஏற்பட வழி வகுக்கும் என்பது என்பது எனது நிலைப்பாடாகும்.
எனவே இப்பபோது நிலவும் அமைதிச் சூழலை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டியுள்ளதால் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தங்கொட்டுவ வாராந்த சந்தைக்குள் வியாபாரம் செய்வது தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இத்தால் அறியத் தருகிறறேன்.
ஒப்பம. கே. எஸ். சுஸந்த பெரெரா.
தலைவர். வெண்ணப்புவ பிரதேச சபை.
இந்தக் கடிதம் அவரது கட்டுப்பாட்டில் உள்ள உப அலுவலகங்களுக்கு அனுப்புப்பட்டுள்ளது.
நாடாளுமனற்தில் என்ன நடக்கிறது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். இப்போது உள்ளுராட்சி மன்றங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை இந்தக் கடிதம் காட்டுகிறது. இந்த நிலையில்தான் அனுவப முதிர்ச்சியுள்ள தேர்தல்கள் ஆணைய தலைவருக்கு மாகாண சபைத் தேர்தல் வேண்டிக் கிடக்கிறது.
நமது சட்டத் துறையினர் முன் வந்தால் இந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு அந்த பிரதேச சபைத் தலைவரை பதயிவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கலாம்.
குட்டக் குட்ட நாம் குனிந்து கொண்டிருப்போம் என நினைப்பவர்களுக்கு திருப்பிக் குட்டும் வலிமை எமக்கு உண்டு என்பதைக் காட்டினால் என்ன?
Newton Issac
0 Comments