Subscribe Us

header ads

தங்கொடுவ சந்தையில் முஸ்லிம்களுக்கு அனுமதி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு


தங்கொட்டுவ பொது சந்தை அனைத்து இனங்களுக்கும் திறக்கப்பட வேண்டும் என மாரவில நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்கொட்டுவ பொது சந்தையில் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இந்த சந்தையில் இடமில்லை என வென்னப்புவ பிரதேச சபை முன்னர் தீர்மானித்திருந்தது.

வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் விடுத்துள்ள உத்தரவு தொடர்பில் பொலிஸார் மாரவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஆறு பேர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், அனைத்து இன வர்த்தகர்களும் தங்கொட்டுவ சந்தையில் வர்த்தகம் செய்ய அனுமதிக்குமாறு வென்னப்புவ பிரதேச சபை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments