- மொஹமட் அசாம் -
முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களை தாக்கிய சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை மஞ்சள் நிற துனியினால் உடல் முழுவதும் மறைக்கப்பட்டு பொலீஸாரினால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்தே குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதவான் அங்கிருந்த முஸ்லிம்களை சிறிது நேரம் வெளியே செல்லுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.
0 Comments