Subscribe Us

header ads

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லை !


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு எதிராக கை உயர்த்த வேண்டாமென அனைத்து கத்தோலிக்க மக்களிடமும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்திற்கும் குறித்த தாக்குதல்களுக்கும் தொடர்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரிசுத்த பாப்ரசரை சந்திப்பதற்காக வத்திக்கான் சென்றுள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று ரோம் நகரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கான விசாரணை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை எனவும் பேராயர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
தாக்குதல்கள் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது செயற்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments