2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் புரட்சி மூலம் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முர்ஸி ஜனநாயக முறையில் மக்களால் எகிப்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எகிப்தில் ஜனாதிபதி தேர்தல் 2012 ஜுன் 16,17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.எகிப்து மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியான முஹம்மத் முர்ஸி ஆவார்
அவர் பதவி ஏற்பின் பின்னர் தஹ்ரீர் சதுக்கத்தில் நிகழ்த்திய உரை எகிப்தியர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய உலகின் உள்ளங்களைத் தொட்டுள்ளது, அரபுலகத்தையே திடுக்கிடச் செய்துள்ளது. அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறையடைக்கப் பட்டுள்ள அஷ் ஷேய்க் "உமர் அப்துர் ரஹ்மான்" சலபியை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்தார்
"நான் குண்டு நுழையாமல் இருக்க எந்தக் கவசமும் அணிவதில்லை. மக்கள்தான் அதிகாரமுள்ளவர்கள், மக்களின் அதிகாரத்துக்கு அப்பால் எந்த அதிகாரமும் இல்லை, நான் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் அஞ்சுகிறவன் என்று துணிவாகச் சொல்லியுள்ளார்"
நாட்டின் சின்னமாக நாடே முன்னிலைப்படுத்தப்படவேண்டும், ஜனாதிபதியல்ல. ஏனென்றால் மக்கள் அழியக்கூடியவர்கள் நாடு நிலைத்திருக்கக்கூடியது ஜனாதிபதி பதவி ஏற்ற பின் அரசு, தனியார் நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களை தொங்கவிடுவது சட்டபூர்வமாக தடை செய்யப்படும் என்றும் அதனை மீறுவது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும் என்றும் கூறினார். மேலும் ஜனாதிபதியை வாழ்த்துவதற்காக செலவுசெய்யப்படும் பணத்தை மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் செலவிடுமாறும் குறிப்பிட்டா ஒரு நேர்மையான மனிதர்.
அவசரகால சட்டத்தை எந்த இடத்திலும் அமுல்படுத்த கூடாது என சட்டம் மோற்கொண்டவர் . தனது சம்பளத்தை எகிப்து மக்களுக்காக வழங்கியவர்
அரசமாளிகையில் தொடர்ந்து இருக்க மாட்டேன் தனது வீட்டிலேயே இருப்பேன். என குறிப்பிட்டா ஒரு எளிமையானவர்.
இவ்வாறு நல்ல முறையில் ஒருவருட ஆட்சியை முன்னெடுத்த போது அவருக்கு எதிரான 2013 ஆம் ஆண்டு மதசார்பற்றவர்களும் (கிறிஸ்தவ) முபாரக்கின் ஆதரவாளர்களும் அமெரிக்காவின் பல சதிகளை மேட் கொண்டு வந்தனர்.
இதன் விளைவாக அவரால் நியமித்த இரானுவ தளபதி சீசீ என்பவன் எகிப்தின் கிறிஸ்தவ வாதிகளுடன் இணைந்து குர் ஆனிய மனிதர் முர்சியை மேற்கின் சக்திகளுடன் இரானுவ கிளர்ச்சியை மேற்கொண்டு முர்சியையும் இக்வானிய சகோதரத்துவ இயக்க உறுப்பினர்களையும் கைது செய்தது.
(நமக்கு நாமே துரோகம் இழைக்கப்பட்டோம்) இதன் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகமான நிலையில், அல்லது மேற்கத்திய ஊடகங்களால் இத்தகைய போராட்டங்கள் பூதாகரப்படுத்தப்பட்ட நிலையில், 2013 ஆம் ஆண்டு எகிப்து இராணுவ ஜெனரல் அல் சிசி தலைமையிலான இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது.
எகிப்து அரசியல் அமைப்பு சட்டத்தை நீக்கி உத்தரவிட்டார் அல் சிசி. அதிபர் முர்சி உள்ளிட்ட சகோதரத்துவ அமைப்பின் முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி அட்லி மன்சூர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த ஜனநாயக படுகொலையை சில அரபு நாடுகள் மட்டுமே கண்டித்தன. இதற்கு பின்னணியாக இருந்த அமெரிக்கா தனது கவலையை மட்டும் தெரிவித்தது.
முர்சிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும் எகிப்திய இராணுவம் வேட்டையாடியது இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் சஹீதாக்கப்பட்டனர்.
இதன் பின்னர் எகிப்தின் ஜனாதிபதியாக இராணுவ தளபதி சீசீ தன்னை மக்கள் ஆதரவு இன்றி அறிவித்தான். அதன் பின்னர் இக்வானிய இயக்கம் எகிப்தில் தடை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு மரண தண்டனை வழங்கி எகிப்தின் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது இதில் எகிப்தின் மக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட கலாநிதி முர்சி அவர்களும் உள்ளடங்குவார்.
எகிப்து இராணுவம், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டுமின்றி, சவூதி அரேபயா, போன்ற அரபு நாடுகள் இணைந்து முர்சியை ஆட்சியை விட்டு அகற்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டன. அதிபராக பதவி ஏற்று ஒரு ஆண்டு மட்டுமே கடந்த நிலையில், முர்சி எகிப்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவில்லை என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. பரப்பப்பட்டது. செயற்கையான போராட்டங்கள், திட்டமிட்டு பிரம்மாண்ட போராட்டங்களாக சித்தரித்து, ஊடகங்களில் பூதாகரப்படுத்தும் வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்றன.
இதன்விளைவாக 2013ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் தேதி முகமது முர்சியை இராணுவம் அதிபர் பதவியில் இருந்து நீக்கி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது. முபாரக்கை ஆட்சியில் இருந்து விரட்டும் பேராட்டத்தின் போது, முர்சி பல்வேறு சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டதாகக் கூறி பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, மரண தண்டனை, ஆயுள் தண்டனை என அடுக்கடுக்கான தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கைதாகி சிறைவாசம் அனுபவித்தனர்
முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர் முகமது பெல்தாகியை சிறையில் அடைத்துள்ள இராணுவம், அவரது மகளை கொடூரமான முறையில் கொலை செய்தது. அவரது தந்தை மற்றும் சகோதரரையும் பொய்குற்றச்சாட்டில் கைது செய்தது. அவரது 16 வயது மகனை கூட விட்டுவைக்காமல் அவரையும் கைது செய்தது. இவை ராணுவம் அங்கு நடத்தும் அட்டூழியங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் தான்.
அமெரிக்கா, இஸ்ரேலின் விருப்பங்களுக்கு ஏற்ப அதிபர் சிசி ஆட்சி நடத்தி வருகிறார்.
இவ்வாறு எகிப்து இன்று இஸ்லாத்தின் சுடரை விட்டும் தூரமாகி மேற்கின் சதிக்குள் சிக்குண்டு கிடப்பதை அவதானிக்க முடியுமாக உள்ளது.
யா அல்லாஹ் இவரின் மரணத்தை பொருந்திக் கொள்வாயாக
இவருக்கு சுவனத்தை அளிப்பாயாக எகிப்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான ஆட்சி அதிகாரத்தை வழங்குவாயாக
முகம்மது நபி (ஸல்) அவர்களின் முன் அறிவிப்பின் படி இப்போது சிரியா நம்மிடம் இருந்து சென்று விட்டது .பின்னர் எகிப்து அடுத்து துருக்கி மாத்திரம் எம்மிடம் இருந்து சென்றால் அடுத்து தஜ்ஜாலின் வருகை யை எதிர் பாருங்கள் என முன்னறிவிப்பு உள்ளது
முற்றும் .
0 Comments