Subscribe Us

header ads

அரபு எழுத்துக்களை தடை என்றால் - இந்த 4 விடயங்களையும் செய்ய வேண்டும்


கடந்த சில தினங்களுக்கு  அரபு எழுத்துக்களை தடை செய்தல் மற்றும் வரவேற்பு  பெயர் பலகையில் உள்ள அரபு எழுத்துக்களை தடை செய்தல் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதனை அறிய கிடைத்தது

இந்த ஜனநாயக நாட்டில் நாம் இலங்கையர் மாத்திரம்தான் என்ற கொள்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இதைவரை காலமும் நிறைவேற்றப்படாமல் இருந்த குறித்த பிரேரணை தற்போது மாத்திரம் இதனை கையிலெடுத்தமைக்கான காரணங்களை கூற முடியுமா?

அத்துடன் பின்வரும் தீர்மானங்களையும் நீங்கள் எடுக்காமைக்கான காரணத்தை கூறமுடியுமா என்று உண்மையாக இலங்கையை நேசிப்பவன் என்பதன் அடிப்படையில் தங்களிடம் கேட்க விரும்புகிறேன்

01. அரபு நாட்டில் இருந்து வரும் எரிபொருற்களை பாவிப்பதில்லை

02. அரபு நாடுகளுக்கு பணி புரிய சென்றவர்களை மீள எடுத்தல்

03. இதுவரை அரபு நாட்டில் இருந்து வந்த அனைத்து பணத்தினையும் மீள ஒப்படைத்தல்

04. இனிவரும் காலங்களில் அரபு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பாதிருத்தல்.

வெந்த புண்ணிலே அம்பை எய்துவது போல் உள்ளது உங்கள் தீர்மானம். இது இந்த சூழ்நிலையில் இனவாதத்தினையும் மக்களுக்கிடையில் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் என்ற அச்சம் உள்ளது

றபீக் சர்றாஜ்

-Jaffna Muslim-

Post a Comment

0 Comments