எமது சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில், தலைமைத்துவத்தில் இருப்பவரா நீங்கள் ?
குறைந்தபட்சம் கருத்துச்சொல்பவராக, எழுத்தாளராக, ஆசிரியராக, சமூக ஆர்வலராக, அரசியல் வாதியாக, ஒரு இமாமாக, அரச உத்தியோகத்தராக, ட்ரஸ்டி போர்ட் அங்கத்தவராக, பேசும் இளைஞராக, சந்தி பஜார் உறுப்பினராக, அல்லது social media எழுத்தாளராகவேணும் இருப்பவரா நீங்கள்..?
உங்களது உயர்ந்த ஒரு பங்களிப்பு தேவைப்படும் நேரத்தில் புத்தளம் இருக்கிறது..!
# 19 அதிகாலை, அனைவருக்குமான "பஜ்ர்" தொழுகை இன்ஷா அல்லாஹ் பெரியபள்ளியில் ஏற்பாடு செய்யப்படுகிறது...
# விஷேட துஆ உடன் கொழும்பு நோக்கி எமது பயணம் ஆரம்பமாகவிருக்கிறது...
# பௌத்த, இந்து, கிறிஸ்தவ சகோதரர்கள் தங்களது பிரதான மதஸ்தானங்களில் வழிபாடுகளை நிறைவு செய்து வரவிருக்கிறார்கள்..
ஊருக்கு வெளியே, தலை நகரில் நிகழும் எமது முதலாவது Protest..!
நீங்கள் செய்யும் சிறிய முயற்சி கூட இந்த சவாலான ஏற்ப்பாட்டிட்கு அத்தியாவசியம் என்ற அந்தஸ்த்தைப்பெறும்..!!
இந்த அதிகாலைத் தொழுகைக்காகவும், ஒரு சமூகப்பணிக்காகவும்..
ஒரே நேரத்தில் 19 அதிகாலை, மக்களை கொண்டுவந்து சேர்க்கவேண்டிய மகத்தான பொறுப்பை உங்களுக்கும் தருகிறோம்..!
உயிரின் ஆழத்தில் இருந்து ஒரு முயற்சியை செய்வீர்களா..?
இந்த கனதியான பொறுப்பை கண்ணுக்குத்தெரியாத இடத்திலிருந்தேனும் கச்சிதமாய் சுமப்பீர்களா..?
உங்களால் ஒரு 100 பேர் இந்தப்பேரணியில் அதிகரிப்பார்களா..?
"ஆம்" என்ற சொல்லை அல்லாஹ்விடம் சொல்லுங்கள்... இன்னும் பிறக்காத ஒரு சந்ததியின் இதயத்தில் நில்லுங்கள்..!!
வருதல் என்பது இறுதி நிலை பங்களிப்பு..!
வரச்செய்தலுடன் வருவது தலைமைத்துவப் பங்களிப்பு..!!
குப்பையை எதிர்க்கும் தலைவர்களை எதிர்பார்த்து,
-------
0 Comments