நம்பிக்கைத் துரோகம் செய்தான். புகைப்படங்களைக் காட்டி மிரட்டினான். படுக்கைக்கு அழைத்தான். மறுத்தால் இன்டர்நெட்டில் மலிவாய் என்று பயமுறுத்தினான்.
சம்மதிப்பது போல் அழைத்து நானும் துரோகம் செய்தேன்.
இதோ, கழுத்து அறுபட்டு உயிரற்றுக் #கிடக்கிறான்அல்லது #கிடக்கிறேன்.
எப்போது இவ்வாறான செய்திகள் வைரலாகுமோ அப்போது தான் என் சமூகத்திற்கு விடுதலை.
ஒரே கும்பலால் இருநூறு பெண்கள் கற்பழிப்பு என்ற நிலை மாறி, அதிகபட்சம் அவனோடோ அல்லது அவளோடோ இழப்புகள் குறைந்திருக்கும்.
முன்பின் தெரியாத சற்றும் முன்கூட்டியே அநுமானிக்க முடியாத பாலியல் வன்முறைகள் எமது சமூகத்தில் கோடியில் ஒன்றாக மிகமிக அரிகாதவே நடக்கின்றன. ஆனால் மிகுதி அனைத்தும் ஏதோ ஒருவகையில் காதல் என்ற போர்வையிலோ, நம்பிக்கை, நட்பு என்ற போலி சதிவலைகளிலோ தான் அரங்கேறுகின்றன. இவ்வாறான சூழ்ச்சிகளில் சிக்கி விடாது எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பதையும், துரதிஷ்டவசமாக இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் எமது குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
ஓநாய்கள் நிறைந்த காட்டில் எல்லா மான் குட்டிகளுக்கும் ஒரே பயிற்சிதான். மாட்டினால் கூரிய கொம்பினால் குத்திக் கொல்வது அல்லது ஓடித் தப்பித்துக் கொள்வது. இதில் ஆண்குட்டிக்கு வேறு பெண்குட்டிக்கு வேறு வழிமுறைகளைப் பின்பற்ற முடியாது.
வீரம், தற்காப்பு இருபாலாருக்கும் பொதுவானதே. எமது பெண் குழந்தைகளை வேங்கைகளாக வளர்த்திடுவோம். காக்கைக்குக் கூட இரையாகிடும் கோழிக்குஞ்சுகளாக அல்ல.
0 Comments